அஞ்ஞவதைப் பரணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அஞ்ஞவதைப் பரணி 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
இது அஞ்ஞவதைப் பரணி எனவும், ஞானபரணி எனவும், தத்துவக் காட்சி எனவும் கூறப்படும்.

இந்த நூலைப் பற்றிய செய்தியை மறைஞான தேசிகர் [1] என்பவர் தாம் எழுதிய உரைநூலில் [2] குறிப்பிடுகிறார்.
ஞானம் என்பது மெய்யறிவு.
அஞ்ஞானம் என்பது பொய்யறிவு.
பொய்யறிவைப் போரிட்டு வதம் செய்வதை இந்த நூல் பரணி நூலுக்கு உரிய இலக்கண அமைதியோடு பாடுகிறது.
இதில் 493 தாழிசைகள் உள்ளன.
இந்த நூலின் பாட்டுடைத் தலைவர் சொரூபானந்தர் [3],
அவருக்கு எதிரி அஞ்சானம்.
அஞ்சானம் ‘அஞ்ஞன்’ என்னும் பகைவனாக இதில் உருவகம் செய்யப்பட்டுள்ளான்.
இதில் வள்ளைப்பாட்டு என்னும் பாடல்-உறுப்பு வருகிறது.
அது ‘கம்மலோ கம்முலக் காய்’ (கம்மலோ கம்மு உலக்காய்) என முடிகிறது.
இது ஒருவகை வள்ளைப்பாட்டு இது ஒரு சாத்திர நூல்.
16-ஆம் சூற்றாண்டில் வாழ்ந்த மறைஞான தேசிகர் தாம் எழுதிய சித்தியார் உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.

கருவிநூல்

அடிக்குறிப்புகள்

  1. 15ஆம் நூற்றாண்டு
  2. சித்தியார் உரை
  3. உருவம் அறிதுயில் கொள்ளும் ஒருவர்
"https://tamilar.wiki/index.php?title=அஞ்ஞவதைப்_பரணி&oldid=17043" இருந்து மீள்விக்கப்பட்டது