மாரி செல்வராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாரி செல்வராஜ் (Mari Selvaraj) எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். பரியேறும் பெருமாள் என்ற தமிழ்த் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 10 வருடங்களுக்கு மேலாக இயக்குனர் ராமிடன் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். பத்திரிக்கையாளராக சில வருடங்கள் பணியில் இருந்தவர், ஆனந்த விகடனில் "மறக்க நினைக்கிறேன்" என்ற தொடரை எழுதியவர்.[1][2]

துவக்க வாழ்கை

மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு ஆடியிருக்கிறார். சென்னைக்கு வந்து ராமிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மாரி செல்வராஜ்

"https://tamilar.wiki/index.php?title=மாரி_செல்வராஜ்&oldid=9400" இருந்து மீள்விக்கப்பட்டது