மண்டலபுருடர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மண்டலபுருடர் என்பவர் சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர்.[1] இவர் தன்னை "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" எனக் கூறிக்கொள்கிறார். வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவரது சமயம் ஆருகதம். இதனை இவரது 'பன்னிரண்டாவது பல்பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி' என்னும் பகுதிக்கு எழுதப்பட்டுள்ள சிறப்புப் பாயிரத்திலுள்ள தொடரால் அறியலாம்.[2] இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவர். பல வடசொற்களைத் தமிழ்ச்சொள்களாக ஆக்கிப் பொருளினைத் தொகுத்துக் கூறியுள்ளார். நிகண்டு நூல்கள் பலவற்றில் இவர் இயற்றிய நிகண்டு விருத்தம் என்னும் யாப்பில் உள்ளமையால் பலரும் படித்துப் புரிந்துகொண்டு போற்றுகின்றனர்.

அடிக்குறிப்பு

  1. மண்டல புருடர் (1509-1529 (கிருஷ்ணதேவராயர் காலம்)). சூடாமணி நிகண்டு மூலமும் உரையும் (ஆறுமுக நாவலர் பரம்பரை யாழ்ப்பாணம் மேலைப்புலியூர் நா. கதிரைவேற்பிள்ளை மாணாக்கர் ப. கணேச முதலியார் 12 ஆம் தொகுதிக்கு எழுதிய உரையுடன்), பதிப்பு 1934. திருநெல்வேலி, சென்னை: பூமகள் விலாச அச்சுக்கூடம். பக். 83. 
  2. சொல்வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நூல் எல்லையா
    நல்வகை யாக்குப் பிண்டி நான்முகன் நாளும் தீமை
    வெல்வினை தொடங்கச் செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி
    பல்வகைப் பெயர்க் கூட்டத்தின் ஒருபெயர் பகரல் உள்ளாம்.
"https://tamilar.wiki/index.php?title=மண்டலபுருடர்&oldid=18234" இருந்து மீள்விக்கப்பட்டது