திருவல்லம் பாசுகரன் நாயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவல்லம் பாசுகரன் நாயர் (பிறப்பு ஜி. பாசுகரன் நாயர்) 20 ஆம் நூற்றாண்டின் மலையாளக் கவிஞர் ஆவார். அவர் பண்டைய இந்தியத் தத்துவ நூல்களான திருக்குறளின் மலையாள மொழிபெயர்ப்பிற்காக நன்கு அறியப்பட்டவர். திருக்குறள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமின்றி மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குறளின் மூன்று நூல்களுள் முதல் நூலை மட்டுமே நாயர் மொழிபெயர்த்தார். மேலும் மொழிபெயர்ப்பு உரைநடையில் உள்ளது. காஞ்சி சங்கராச்சாரியார் இவருடைய பணியினை போற்றும் வண்ணம் 'காவ்யவல்லபன்' எனப் பாராட்டியுள்ளார். [1]

திருக்குறளின் மொழிபெயர்ப்பு

பாஸ்கரன் நாயர் திருக்குறளின் முதல் நூலை (அறம் நூல்) மலையாளத்தில் மொழிபெயர்த்து 1962 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பாஷா திருக்குறள் (தர்மகண்டம்) என்ற பெயரில் வெளியிட்டார். இம்மொழிபெயர்ப்பில் குறள் செய்யுள் தமிழில் எழுதி இதற்கான உரையை மலையாளத்தில் எழுதியுள்ளார்.. [2]

குறளின் மேன்மை

பாஸ்கரன் நாயர், "பகவத் கீதை இல்லாத இடத்தில் திருக்குறள் தொடங்குகிறது" என்று கூறி குறளின் மேன்மையை குறிப்பிட்டுள்ளார்.

1959 ஆகஸ்ட் 30 அன்று, அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த கே. காமராஜுக்கு எழுதிய கடிதத்தில் நாயர் குறளின் மேன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்கவும்

  • திருக்குறள் மொழிபெயர்ப்பு
  • மலையாளத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு
  • மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியல்

மேற்கோள்கள்