ஜோஹா அல்-ஹார்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோஹா அல்-ஹார்தி
பிறப்புஜூலை 1978 (அகவை 45–46)
ஓமான்
தேசியம்ஓமான்
பணிஎழுத்தாளர் மற்றும் கல்வியாளர்
அறியப்படுவதுமேன் புக்கர் சர்வதேச விருது 2019
குறிப்பிடத்தக்க படைப்புகள்நரிஞ்சா, சய்யிதத் எல்-கமர்

ஜோஹா அல்-ஹார்தி (Jokha al-Harthi) ஓர் ஓமான் நாட்டின் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஓமனிலும் இங்கிலாந்திலும் கல்விப் பயின்றார்.. எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அரபு செவ்விலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் அரபித் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1][2]

படைப்புகள்

அல்-ஹார்தி மூன்று சிறுகதைகள், மூன்று நாவல்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவர் கல்வி பாடப்புத்தகங்கள் உருவாக்குவதிலும் இணைந்து செயல்பட்டுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், செர்பியா, கொரியா, இத்தாலி, செர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[3]

விருதுகள்

அல்-ஹார்தியின் நரிஞ்சா என்ற நாவலுக்காக 2016 ஆம் ஆண்டு கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கான சுல்தான் கபூஸ் விருது வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இவரது சய்யிதத் எல்-கமர் என்ற படைப்பு ஜயித் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. மேலும் இந்த படைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேன் புக்கர் சர்வதேச விருது பெற்றது.[4][5]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜோஹா_அல்-ஹார்தி&oldid=18660" இருந்து மீள்விக்கப்பட்டது