சோம. இளவரசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சோம. இளவரசு
இயற்பெயர் புலவர் சோம. இளவரசர்
பிறந்ததிகதி (1934-12-25)25 திசம்பர் 1934
பிறந்தஇடம் கீழச்சீவல்பட்டி, தமிழ்நாடு
இறப்பு 31 மே 1986(1986-05-31) (அகவை 51)
பணி பேராசிரியர்
தேசியம் இந்தியர்
கல்வி நிலையம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சோம. இளவரசு (டிசம்பர் 25, 1934 - மே 31, 1986) என்பவர் நன்னூலுக்கு உரையெழுதிய தமிழ்ப் பேராசிரியராவார். மேலும் மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், நூலாசிரியர், உரையாசிரியராகவும் திகழ்ந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

சோமசுந்தரம் செட்டியார், கல்யாணி ஆச்சி தம்பதியினரின் மூத்த மகனாகக் கீழச்சீவல்பட்டி சூரக்குடியில் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். முதுகலைத் தமிழ்ப் பட்டம் பெற்றார். 1957-58 அரசர் அண்ணாமலை விருதினைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 28 ஆண்டுகள் தமிழ்த் துறையில் பணியாற்றினார். இவர் 1963ஆம் ஆண்டு எழுதிய இலக்கண வரலாறு நூல் உட்பட இவரது நூல்கள் பல்வேறு கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன.[2][3][4]

எழுதிய நூல்கள்

  1. இலக்கண வரலாறு
  2. இலக்கிய வரலாறு
  3. திருவருணைக் கலம்பகம்
  4. 20 நூற்றாண்டுகளில் தமிழ்
  5. காப்பியத் திறன்
  6. பரணி இலக்கியம்
  7. நீதி சூடி
  8. நன்னூல் உரை- எழுத்ததிகாரம்
  9. நன்னூல் உரை - சொல்லதிகாரம்

மேற்கோள்கள்

  1. நகரத்தார் கலைக்களஞ்சியம் (2002 ). மெய்யப்பன் தமிழாய்வகம். பக். 70. 
  2. "இலக்கிய வரலாறு". https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0lZU7#book1/. பார்த்த நாள்: 20 October 2023. 
  3. "இளங்கலைப் பாடத்திட்டம்". https://gacsalem7.ac.in/wp-content/uploads/2021/11/BA-Tamil-2017-onwards.pdf. பார்த்த நாள்: 20 October 2023. 
  4. "முதுகலைப் பாடத்திட்டம்". https://www.periyaruniversity.ac.in/Documents/2021/syllabus/2021/Affiliated/pg1/M.A%20TAMIL.pdf. பார்த்த நாள்: 20 October 2023. 
"https://tamilar.wiki/index.php?title=சோம._இளவரசு&oldid=16631" இருந்து மீள்விக்கப்பட்டது