சோம. இளவரசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சோம. இளவரசு
இயற்பெயர் புலவர் சோம. இளவரசர்
பிறந்ததிகதி (1934-12-25)25 திசம்பர் 1934
பிறந்தஇடம் கீழச்சீவல்பட்டி, தமிழ்நாடு
இறப்பு 31 May 1986(1986-05-31) (aged 51)
பணி பேராசிரியர்
தேசியம் இந்தியர்
கல்வி நிலையம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சோம. இளவரசு (டிசம்பர் 25, 1934 - மே 31, 1986) என்பவர் நன்னூலுக்கு உரையெழுதிய தமிழ்ப் பேராசிரியராவார். மேலும் மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், நூலாசிரியர், உரையாசிரியராகவும் திகழ்ந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

சோமசுந்தரம் செட்டியார், கல்யாணி ஆச்சி தம்பதியினரின் மூத்த மகனாகக் கீழச்சீவல்பட்டி சூரக்குடியில் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். முதுகலைத் தமிழ்ப் பட்டம் பெற்றார். 1957-58 அரசர் அண்ணாமலை விருதினைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 28 ஆண்டுகள் தமிழ்த் துறையில் பணியாற்றினார். இவர் 1963ஆம் ஆண்டு எழுதிய இலக்கண வரலாறு நூல் உட்பட இவரது நூல்கள் பல்வேறு கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன.[2][3][4]

எழுதிய நூல்கள்

  1. இலக்கண வரலாறு
  2. இலக்கிய வரலாறு
  3. திருவருணைக் கலம்பகம்
  4. 20 நூற்றாண்டுகளில் தமிழ்
  5. காப்பியத் திறன்
  6. பரணி இலக்கியம்
  7. நீதி சூடி
  8. நன்னூல் உரை- எழுத்ததிகாரம்
  9. நன்னூல் உரை - சொல்லதிகாரம்

மேற்கோள்கள்

  1. நகரத்தார் கலைக்களஞ்சியம் (2002 ed.). மெய்யப்பன் தமிழாய்வகம். p. 70. {{cite book}}: |access-date= requires |url= (help)
  2. "இலக்கிய வரலாறு". த.இ.க மின்னூலகம். Retrieved 20 October 2023.
  3. "இளங்கலைப் பாடத்திட்டம்" (PDF). சேலம் அரசுக் கல்லூரி. Retrieved 20 October 2023.
  4. "முதுகலைப் பாடத்திட்டம்" (PDF). பெரியார் பல்கலைக் கழகம். Retrieved 20 October 2023.
"https://tamilar.wiki/w/index.php?title=சோம._இளவரசு&oldid=99856" இலிருந்து மீள்விக்கப்பட்டது