ஐந்திணை ஐம்பது பழைய உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஐந்திணை ஐம்பது பழைய உரை என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, மாறன் பொறையனாரால் இயற்றப்பட்ட ஐந்திணை ஐம்பது என்னும் நூலுக்கு எழுதப்பட்ட பழைய உரையைக் குறிக்கும்.

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

ஐந்திணை ஐம்பது நூலுக்கும் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2] இந்த உரை தெளிவும் திருத்தமும் கொண்ட பொழிப்புரையாக உள்ளது. சிற்றியல்புகள் எதுவும் இதில் இல்லை. இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

அடிக்குறிப்புகள்

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
  2. 1912 செந்தமிழ், ரா. ராகவையங்கார், இரண்டாம் பதிப்பு
"https://tamilar.wiki/index.php?title=ஐந்திணை_ஐம்பது_பழைய_உரை&oldid=15676" இருந்து மீள்விக்கப்பட்டது