அ. சங்கரன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
அ. சங்கரன் (பிறப்பு: மார்ச்சு 30 1947) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துத்துறையில் அன்பு சங்கரன், மலாக்கா சங்கரன், சாரங்கன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர், மலாக்கா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராகச் செயற்பட்டு வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள், கவிதைகள் முதலியவற்றை இவர் அதிகமாக எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பரிசில்களும், விருதுகளும்
தமிழர் திருநாள் மேடைகளில் இவரின் கதைகளும். கவிதைகளும் பரிசுகள் பெற்றுள்ளன.