ஜமகண்டி
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 16°30′17″N 75°17′31″E / 16.504741°N 75.291882°E |
| மாவட்டம் | பாகலகோட்டை |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஜமகண்டி (Jamakhandi) இந்திய மாநிலமான கர்நாடகத்தின் பாகலகோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியாகும். இதை தலைமையகமாகக் கொண்டு ஜமகண்டி வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்
இங்கு மஞ்சள், சோளம், கோதுமை, நிலக்கடலை, சப்போட்டா, சூரியகாந்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். மக்களின் தொழில் உழவுத் தொழிலாகும்.
அரசியல்
ஜமகண்டி பேரூராட்சியும் ஜமகண்டி வட்டத்தின் சில ஊர்களும் ஜமகண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. வட்டத்தின் பிற ஊர்கள் தெர்தலா சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. மொத்த வட்டமும் பாகலகோட்டை மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]
வேறு தகவல்கள்
1937ஆம் ஆண்டில், 22வது கன்னட இலக்கிய மாநாடு ஜமகண்டியில் நடந்தது.
சான்றுகள்
இணைப்புகள்
- பாகலகோட்டை மாவட்டத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2017-06-30 at the வந்தவழி இயந்திரம்