வேயி படகலு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேயி படகலு
நூலாசிரியர்விசுவநாத சத்யநாராயணா
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

வேயி படகலு (Veyi Padagalu ஆங்கிலம்: "A Thousand Hoods பொருள்:ஆயிரம் நாகத் தலைகள்) என்பது விசுவநாத சத்யநாராயணா எழுதிய தெலுங்குக் காவியப் புதினம் ஆகும். இது 20-ஆம் நூற்றாண்டின் தெலுங்கு இலக்கியத்தின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்பாகும். மேலும் இது, "டால்ஸ்டாய் படைப்புகளின் பரந்த நோக்கத்துக்கு ஒப்பான புதினம்" என்றும் பாராட்டப்படுகிறது.[1] இந்தப் புதினம் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தலைப்பில் உள்ள "ஹூட்ஸ்" என்பது கதையில் வரும் ஆயிரம் தலை கொண்ட நாகத் தெய்வத்தினைக் குறிக்கிறது.[2]

பின்னணி

இந்தப் புதினம் 1934-ஆம் ஆண்டில் ஆந்திரப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த ஒரு போட்டிக்காக எழுதப்பட்டது. இந்தப் புதினம், இந்தப் பிரிவில் ஆதிவி பாபிராஜு நாராயண ராவுடன் பரிசைப் பகிர்ந்து கொண்டது.[3] விஸ்வநாதர் இந்த நாவலை தனது இளைய சகோதரர் வெங்கடேஷ்வர்லுவிடம் விரிவாகக் கூறியதன் மூலம், அவர் அதை எழுதினார்.[4] இது 29 நாட்களில் முடிக்கப்பட்டது, 999 அகலத் தாள்களை எடுத்துக்கொண்டது.[5] இந்தப் புதினம் அவரது சொந்த வாழ்க்கையால் பாதிக்கப்பட்டது என்று ஆசிரியரின் நெருங்கிய நண்பர்கள் பலர் கூறுகின்றனர்.[6]

பின்னர், இது ஆந்திரா பத்திரிகாவில் 1937-38 ஒரு தொடராகவும், பின்னர் மீண்டும் ஒரு முறையும் வெளியிடப்பட்டது.[5] மீண்டும் 1987-88 இல், அதே செய்தித்தாளின் பொன்விழா பதிப்பில் மீண்டும் வெளியிடப்பட்டது.

கதை மாந்தர்கள்

  • ராமேஸ்வர சாஸ்திரி - சுப்பண்ணபேட்டாவின் பரம்பரை முதலமைச்சர் [2]
  • ராமசேவரா சாஸ்திரியின் பிராமண மனைவி சாவித்ரம்மாவின் மகன் - தரம் ராவ் [2]
  • இராமேஸ்வர சாஸ்திரியின் மகன் - ராமச்சந்திர ராஜு (அவரது சத்திரிய மனைவி ரங்கஜம்மா மூலம்) [2]
  • பசிரிகா- இராமேஸ்வர சாஸ்திரியின் மகன், அவரது சூத்திர மனைவி மங்கம்மா [2]
  • கிருஷ்ணமா நாயுடு- கிராமத்தின் ஜமீந்தார் [2]
  • ரங்க ராவ்- மேற்கத்தியமயமாக்கப்பட்ட, இங்கிலாந்தில் படித்த கிருஷ்ணமா நாயுடுவின் மகன் [2]
  • ஹரப்பா நாயுடு- ரங்க ராவின் ஒரே மகன் [2]
  • கணச்சாரி- உள்ளூர் கோயில்களில் ஒன்றின் தெய்வம் மற்றும் சிவனின் பிரதிநிதித்துவம், அவருக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் திறன் உள்ளது[2]
  • கிரிகா- உள்ளூர் கோயில்களில் ஒன்றின் தெய்வமான வேணுகோபால சுவாமியின் சேவையில் ஒரு தேவதாசி மற்றும் விஷ்ணுவின் பிரதிநிதித்துவம் [2]

மேற்கோள்கள்

  1. "Classical Telugu Poetry". publishing.cdlib.org. Retrieved 2020-05-23.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Encyclopaedia of Indian literature. Caudhurī, Indranātha, 1936-, Datta, Amaresh,, Mohanlal, 1962-, Abichandani, Param Anand, 1926-, Dutt, K. C. (Kartik Chandra), 1930-, Sahitya Akademi. (Revised ed.). New Delhi. 2006. p. 4556. ISBN 978-81-260-2384-4. கணினி நூலகம் 430192715.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  3. Padmaraju, P. (1979). "Viswanatha—The Novelist". Indian Literature 22 (4): 33–42. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5804. http://www.jstor.org/stable/23330045. 
  4. Sankar, K. N. Murali (2015-10-29). "'Veyi Padagalu' in English" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/five-translators-worked-on-viswanatha-satyanarayanas-acclaimed-work-veyi-padagalu-to-make-it-available-in-english/article7818134.ece. 
  5. 5.0 5.1 . 
  6. Veyi Padagalu Telugu. Prologue. 2012.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://tamilar.wiki/w/index.php?title=வேயி_படகலு&oldid=503766" இலிருந்து மீள்விக்கப்பட்டது