ரிபுக்கள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ரிபு (Ribhus (சமசுகிருதம்: ऋभु),என்பது மிகவும் பழமையான சமஸ்கிருதச் சொல் ஆகும்[1]. அதன் பொருள் காலப்போக்கில் மாறிவிட்டது. ஆரம்பகால வேத இலக்கியங்களில், ரிபு என்பது சூரியனைக் குறிக்கிறது.[1] It evolved to being a wind deity, thereafter referred to three male artisans whose abilities and austerities make them into divinities in later Vedic texts.[1][2] பின்னர், ரிபு என்பது "காற்றின் கடவுள்" என்று பொருள் கொள்ளப்பட்டது. பின்னர், வேதத்திற்குப் பிந்தைய காலத்தில், இது மூன்று கைவினைஞர்களைக் குறிக்கும் கூட்டுச் சொல்லாக மாறியது. இந்த கைவினைஞர்கள் "ரிபாவா" என்று அழைக்கப்படுகின்றனர். மேலும் அவர்களின் திறன் மற்றும் தியாகம் காரணமாக, அவர்கள் கடவுள்களாகக் கருதப்பட்டார்கள். சுதன்வாவின் மூன்று மகன்களான ரிபு, வாஜ் மற்றும் விப்வன் (அல்லது விபு) "அரை கடவுள்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் மூத்தவர் ரிபு. இச்சகோதர்களை கூட்டாக ரிபுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ரிபு என்பதன் நேரடிப் பொருள் புத்திசாலி, திறமையானவர், ஆராய்ச்சியாளர், புதுமைப்பித்தன், கைவினைஞர், தேரோட்டி, முதலியன.

மந்திரம்: ஷां நோ ரிபவஹ் சுக்ருதஹ் சுஹஸ்தாஹ் (சிறந்த கருவிகளைக் கொண்ட புத்திசாலித்தனமான கைவினைஞர்களான ரிபவஹ் நமக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.)

சில வேத நூல்களில் ரிபுக்களை காலை ஒளியின் கடவுள் மற்றும் இந்திரனின் மகன்களாக விவரிக்கப்படுகிறார்கள். அதர்வண வேதம் போன்ற பிற இலக்கியங்களில் ரிபுக்களை சுதன்வனின் (அதாவது: நல்ல வில்லாளி) மகன்களாக விவரிக்கின்றது.[1][1][3][3] In either legends, they are famous for their creative abilities, innovation and they design chariots, the magic cow of plenty, channels for rivers, and tools for Indra and other gods, which makes many envious.[1][4]. இருப்பினும் அனைத்து சமஸ்கிருத இலக்கியங்களிலும், இந்த மூவரும் (ரிபுக்கள்) தங்கள் படைப்பாற்றல் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்றவர்களாக குறித்துள்ளது.. அவர்கள் இந்திரன் மற்றும் பிற கடவுள்களுக்கு இரதங்கள், காமதேனு, ஆறு வாய்க்கால்கள் மற்றும் ஆயுதங்களை உருவாக்குகிறார்கள்.

பிற்கால புராணங்கள் ரிபுக்கள் பூமியில் மனிதர்களாகப் பிறந்து தங்கள் கலை மற்றும் கைவினைகளைப் பரப்பியதாகக் கூறுகிறது. அவர்கள் மிகவும் எளிமையானவர்கள் மற்றும் கனிவானவர்கள்[1]. இது சில கடவுள்களை கோபப்படுத்தியது. இதனால் ரிபுக்களை மீண்டும் சொர்க்கத்திற்கு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்[1] . ஆனால் மற்ற கடவுள்கள் தலையிட்டு ரிபுக்களை அழியாதவர்களாக மாற்றினர். முனிவர்கள், நட்சத்திரங்கள் அல்லது சூரியனின் கதிர்களாக ரிபுக்களை கருதுகிறார்கள்.[1][3]

மேற்கோள்கள்

  • Generally: Monier-Williams, Sanskrit-English Dictionary (1899), s.v. 'ṛbhu'
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Charles Russell Coulter; Patricia Turner (2013). "Ribhus". Encyclopedia of Ancient Deities. Routledge. p. 918. ISBN 978-1-135-96397-2.
  2. HH Wilson (1866). Rig-Veda-Sanhita, The First Ashtaka or Book (2nd ed.). London: Trubner & Co. pp. 46–48 with footnotes, 284–285.
  3. 3.0 3.1 3.2 Ralph Thomas Hotchkin Griffith (1895). The Hymns of the Atharvaveda. E. J. Lazarus & Company. pp. 270 footnote 3 on The Sages. ISBN 9780524075036.
  4. HH Wilson (1866). Rig-Veda-Sanhita, The First Ashtaka or Book (2nd ed.). London: Trubner & Co. pp. 46–48 with footnotes, 135, 171, 283–287.
"https://tamilar.wiki/w/index.php?title=ரிபுக்கள்&oldid=484467" இலிருந்து மீள்விக்கப்பட்டது