மு. மு. முஸ்தபா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மு. மு. முஸ்தபா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளி, தாயனூரில் தேசிய விதை ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராகப் பணிபுரிகிறார். இவர் வாழை அரசன் விருது, கதலி புரஸ்கார் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல ஆராய்ச்சிக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் இரா. தங்கவேலுவுடன் சேர்ந்து எழுதிய “வாழைச் சாகுபடியில் புதிய தொழிநுட்பங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://tamilar.wiki/index.php?title=மு._மு._முஸ்தபா&oldid=5582" இருந்து மீள்விக்கப்பட்டது