மு. புஷ்பராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மு. புஷ்பராஜன் யாழ்ப்பாணத்திலுள்ள குருநகரில் 1947இல் பிறந்தவர். இலங்கை போக்குவரத்துச் சபையில் பேருந்து நடத்துனராகவும் பின்னர் சாலைப் பரிசோதகராகவும் பணிபுரிந்தவர். இப்பொழுது லண்டனில் வாழ்கிறார்.

கலை, இலக்கியம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஈடுபாடுடைய இவர் எழுபதுகளில் எழுதத் தொடங்கினார். இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார். அலையின் முதல் 25 இதழ்கள் வரை ஆசிரியர் குழுவில் இருந்தவர்.

இவரது நூல்கள்

  • அம்பா (மீனவர் பாடல்கள், அலை வெளியீடு, 1976)
  • மீண்டும் வரும் நாட்கள் (கவிதைகள், 2004)
"https://tamilar.wiki/index.php?title=மு._புஷ்பராஜன்&oldid=2372" இருந்து மீள்விக்கப்பட்டது