மான் வாகனம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மான் வாகனம்
உரிய கடவுள்: சந்திரன், முருகன், திருமகள்

மான் வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி மான் என்பது முருகன், திருமகள் மற்றும் சந்திரனின் வாகனம் ஆகும்.

வாகன தத்துவம்

கலைமான் கொற்றவையான துர்க்கைக்கு வாகனமாக இருக்கிறது. பாய்ந்து வரும் கலைமானைக் கொற்றவை வாகனமாகக் கொண்டிருப்பதால் அவள் பாய்கலைப் பாவை என்றும் கலையதூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறாள். மானை சிவபெருமான் இடது கரத்தில் ஏந்தியுள்ளார். அதனால் அவருக்கு மானேந்தி அப்பர் என்பது பெயராயிற்று.


கோயில்களில் உலா நாட்கள்

  • மருங்கூர்,இரவிபுதூர் ஆபத்துகாத்த நங்கை அம்மன்.
  • காஞ்சிபுரம், மேற்கு ராஜவீதியில் உள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழாவின் போது மான் வாகனத்தில் முருகன் உலா வருகிறார். [1]
  • வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன்
  • காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு உற்சவத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மனோரஞ்சித பூ, மல்லிப்பூ மாலை அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தங்க மான் வாகனத்தில் உலா வருகிறார்.

இவற்றையும் காண்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மான்_வாகனம்&oldid=465036" இலிருந்து மீள்விக்கப்பட்டது