ப. இலக்குமணசாமி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ப. இலக்குமணசாமி
பிறப்புஆகத்து 7 1930
மூவார்
ஜோகூர்
மலேசியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

ப. இலக்குமணசாமி (பிறப்பு: ஆகத்து 7 1930) மலேசியாவின் ஜோகூர் மாநிலம் மூவார் எனுமிடத்தில் பிறந்த இவர் சண்முகானந்தா பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்வான் பட்டத்தைப் பெற்றார்.

பதவிகள்

தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் தேர்ச்சியுள்ள இவர் செம்பவாங் தமிழர் சங்கத்தின் செயலாளராகவும், செம்பவாங் நலனபிவிருத்தி சபைப் பொருளாராகவும், ஸ்ரீருத்ர காளியம்மன் கோயில், அரசகேசரி சிவன் கோயில் மற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

எழுதியுள்ள நூல்

  • தெய்வத் தமிழ் இசை

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/w/index.php?title=ப._இலக்குமணசாமி&oldid=90469" இலிருந்து மீள்விக்கப்பட்டது