பெருங்கதைப் பெயரடைவு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெருங்கதை நூலில் வரும் கதைமாந்தர் பெயர்களையும், நாடு, நகரம், மலை முதலான இடப்பெயர்களையும், யாழ், யானை முதலான பொருள்களுக்கு இட்டு வழங்கப்பட்ட பெயர்களையும், அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகளையும் இங்குக் காணலாம்.

பெயரடைவு

அச்சுவப்பெருமான் – கேகய நாட்டு அரசன்
அடவி - தருசகனின் பகையரசன்
அநங்கவிலாசனி- நீலவேகனின் மகள்,நரவாணனின் மனைவி
அயோத்தியரசன் - தருசகனின் பகையரசன்
அரிசிகன்- உருமண்ணுவாவின் புதல்வன்
அரிமான் - தருசகனின் பகையரசன்
அருஞ்சுகன் - உதயணனின் கோடபதி யாழைக் கொண்டு வந்து உதயணனிடம் கொடுத்தவன்.இவன் வேதம் ஓதும் அந்தணன். யாழிசைப் பயின்றவன்
அவந்தி – பிரச்சோதனன் (வாசவதத்தையின் தந்தை) ஆண்ட நாடு
ஆதித்தியதருமன்- உதயணனுடைய போர்வீரன்
ஆரியை- பதுமாபதியின் தோழி பந்தாட்டத்தில் வல்லவள்
ஆருணி – பாஞ்சால நாட்டு அரசன்
ஆலங்கானம் – விபுல மலைச் சாரலில் உள்ள இடம்
இசைச்சன் – உதயணனின் பார்ப்பனத் தோழன்
இடபகன்- கடகம் என்ற ஊரில் வாழ்ந்தவன்
இடவகன் – உதயணனின் அமைச்சன்
இராசகிரியம் – மகதநாட்டின் தலைநகர்
இராசனை- பதுமையின் தோழி உருமண்ணுவாவின் மனைவி
இலாமயன் – வித்தைநில் வல்ல முனிவன். இவன் வனங்கூடத் தீயில் எரிந்துவிட்டது
உச்சையினி (உஞ்சை) – அவந்தி நாட்டுத் தலைநகர்
உதயணன் – பெருங்கதை நூலின் காப்பியத் தலைவன்
உதயையோடை – பதுமாபதியின் தாய்
உருமண்ணுவா – உதயணனின் அமைச்சன்
எலிச்செவி - தருசகனின் பகையரசன்
ஏனாதி- உதயணனின் பெயர் பொறிக்கப் பட்ட மோதிரம் இதை உருமண்ணுவாவிற்கு அணிவித்தான்
ஐராவதி - பதுமாபதியின் தோழி
கடகம்- சாலு என்னும் நாட்டில் உள்ள ஊர்
கடகன் – உதயணனின் தம்பி
கருப்பாசம் – காட்டாறு, சயந்தி நகரிலிருந்து இராசகிரியம் செல்லும் வழியில் உள்ளது
கலிங்கசேனை- கௌசாம்பி நகரில் கல்வி கேள்விகளில் சிறந்த 2,500 கணிகையர்எளில் சிறந்தவள் மதனமஞ்சிகையின் தாய்
காகதுண்டகர் – மந்திரவாதி போல் நடிக்கும் ஒரு பெரியார்.. இறந்த வாசவதத்தையைப் பெறலாம் என்றவர்
காசிராசன் – பதுமாபதியின் தந்தை
காஞ்சுகியர் - பதுமாபதியின் தோழி
காளவனம் – புன்றாளகம் – இராசகிரியம் வழியில் உள்ள காடு
குஞ்சரச்சேரி – உஞ்சை நகரின் ஒர் பகுதி, உதயணன் தங்க வழங்கப்பட்ட இடம்
கும்பன் – பாஞ்சால ராசனின் நண்பன்
கேகயம் – அச்சுவப்பெருமான் ஆட்சி செய்த நாடு
கோசிகன் – சாங்கியத்தாய்க்கு நல்ல தீர்ப்புக் கூறிய சேனைக் கணிமகன்
கோடபதி – யாழின் பெயர். இந்திரன் பிரமசுந்தர முனிவருக்கும், முனிவர் உதயணனுக்கும் வழங்கியது
கோபாலகன் – பிரச்சோதன மன்னரின் மகன்
கோமுகன் இருவர்- இடவகனின் புதல்வன், பதுமாபதிக்கும் உதயணனுக்கும் பிறந்த புதல்வன்
கௌசாம்பி – வத்தவ நாட்டின் தலைநகரம்
சகோரம் – தீயநிமித்தம் காட்டும் பறவை
சங்கரன் - தருசகனின் பகையரசன்
சண்பை – அங்கநாட்டுத் தலைநகர்,
சத்தியகாயன் – தருசகனின் அமைச்சன்
சத்தியகாயன்- போரில் வீரமரணம் அடைந்தவன்
சதானிகன் – உதயணனின் தந்தை
சம்புத்தீவு – சம்புத்தீவு என்றும் உலகத்தை வழங்கினர்.
சயந்தி – உதயணனின் ஆட்சிக்கு உட்பட்ட பெரிய நகரம்
சாங்கியத்தாய் - உதயணனால் காப்பாற்றப் பட்டவள், வாசவதத்தையின் செவிலித் தாய்
சாண்டியன் – உதயணன் தன் தந்தையின் பெயர் என்று ஐராவதியிடம் கூறினான்
சாதகன் – யூகிக்கு உதயணனை மீட்க உதவியவன்
சாலங்காயன் – பிரச்சோதன மன்னரின் அமைச்சன்
சாலி- இடபகனின் மனைவி
சிவமதி – தருசகனின் தாய்
சிவேதன் - பிரச்சோதன மன்னரின் அமைச்சன்
சீதரம்- நரவாணன் தங்கிய நகரம்
சீதரன் – ஆலங்கானத்தில் தவம் செய்த முனிவன்
சுதர்சன மலை – இமயமலை
சுமித்திரன்- நீலவேகன் மகளின் கனவிற்கு பயன் கூறிய முனிவர்
சூவ்ருதர் – உதயணனும் மிருகாபதியும் இருக்கும் இடத்தைக் கூறிய முனிவன்
சேடகன் – உதயணனின் தாய்வழிப் பாட்டன்
சேதிநாடு – சேடகன் ஆட்சி செய்த நாடு
சோதவன் – உதயணனுக்குப் புத்திரனாக சௌதர்மேந்திரன் கட்டளைப்படி வந்த முனிவன்
சௌதர்மேந்திரன்- விண்ணுலகத்தின் தலைவன்
தர்மவீரர்- தவத்தால் சித்தி பெற்ற சாரணர்களின் தலைவர்
தருசகன் – மகதநாட்டின் அரசன்
தருமச்சுருதி- உதயணனுக்கு சினதருமங்களை உபதேசித்த முனிவன்
தருமதத்தன் – தருசகனின் அமைச்சன்
தவந்தகன்- வயந்தகனின் புதல்வன்
தனமித்திரன் – உதயணன் தாத்தா சேடகனின் மூத்த மகன்
தாரகாரி — தருசகனின் அமைச்சன்
திலகசேனை- பரதகனின் தங்கை யூகியின் மனைவி
தெய்வயானை – உதயணன் யாழிசையால் பெற்ற யானை
நஞ்சுகன் – குபேரனின் இயக்கத் தொண்டன், உதயணனுக்குத் தண்ணீர் தந்து உதவியவன்
நரவாணதத்தன்- உதயணனின் புதல்வன்
நருமதை உதயணன் மாளிகையில் ஒரு நாள் தங்கிச் சென்றவள் இவள் கணிகையின் மகள்
நளகிரி – பிரச்சோதன மன்னனுடைய பட்டத்து யானை, உதயணனால் அடக்கப் பட்டது
நாகதத்தை- நீலவேகனின் மனைவி
நீலகேசி- காசிராசன் மகள் விரிசிகையின் தாய்
நீலவேகன்- கந்தருவபுரத்தின் அரசன்
பத்திராபதி – உதயணனைச் சுமந்து வந்த பெண்யானை
பதுமகாரிகை – பிரச்சோதன மன்னனின் மனைவி, வாசவதத்தையின் தாய்
பதுமை (அ) பதுமாவதி – உதயணனின் இரண்டாவது மனைவி
பரதகன்- பிரச்சோதன ராசனுடைய அமைச்சன்
பரமசுந்தரி – பிரமசுந்தர முனிவரின் மனைவி
பருப்பதம் – நருமதை ஆற்றின் கரையிலுள்ள மலை. இதில் குபேரன் தன் ஒனபது மனைவியருடன் மகிழ்ந்திருந்தான்
பாகீரதி – தெய்வாவேசம் கொண்டவள் போல நடித்தவள்
பாஞ்சாலம் – உதயணன் இல்லாத போது கௌசாம்பியைக் கைப்பற்றிய ஆருணி அரசன் ஆண்ட நாடு
பாலகன் – பிரச்சோதனனின் மகன்
பாலகுமரன் – பிரச்சோதனனின் மகன்
பிங்கலன் – உதயணனின் தம்பி
பிரச்சோதனன் – அவந்தி நாட்டு அரசன், உதயணனைச் சிறைப்படுத்தியவன்
பிரமசுந்தர முனிவர் –உதயணனை வளர்த்து கலைகள் பல கற்பித்தவர், யூகியின் தந்தை
புட்பகம் – உதயணனின் ஆட்சிக்கு உட்பட்ட நாடு இந்நாடு உதயணனால் இடவகனுக்கு கொடுக்கப் பட்டது
புண்டரநகரம்- யூகி தத்தை முதலியோர் தங்கிய இடம்
புன்றாளகம் – சயந்தியிலிருந்து இராசகிரியம் செல்லும் வழியில் உள்ள நாடு
பூரணகுண்டலன் – பாஞ்சால ராசனின் அமைச்சன்
மதனமஞ்சிகை- கலிங்கசேனையின் மகள் நரவாணதத்தனின் மனைவி
மதுகாம்பீரம்- கௌசாம்பியின் புறத்தே உள்ள வனம்
மந்தரவரசன்- வெள்ளியங்கிரியின் அரசன் விரிசிகையின் தந்தை
மருபூதி- யூகியின் புதல்வன்
மல்லன் - தருசகனின் பகையரசன்
மாகாள வனம் – உச்சைனியைச் சார்ந்த மிகப்பெரிய நகரம், இதை மகாகாள வனம் என்றும் கூறுவர். யூகி உதயணனை மீட்கச் சென்ற போது இங்கு தான் முதலில் தங்கினான்.
மாணகன் – உதயணன் தன் பெயர் என்று ஐராவதியிடம் கூறினான்
மானசவேகன்- வித்தியாதர நகரத்தின் அரசன்.
மானனீகை- கோசலராசன் மகள், உதயணன் மூன்றாவது மனைவி
மித்திரகாமன் – சண்பை நகரத்து வணிகன்
மிருகாபதி – உதயணனின் தாய்
மிலைச்சன் - தருசகனின் பகையரசன்
முனையூர்- உதயணன் இடவகனுக்கு அளித்த தலைநகர்
யாப்பி- சாலங்காயனின் தங்கை யூகியின் மனைவி
யாப்பியாயினி – பதுமாபதியின் தோழி
யூகி – உதயணனின் உயிர் நண்பன்
வசுந்தரி கோசல தேசத்து பெருந்தேவி
வத்தவ நாடு - உதயணன் ஆட்சி புரிந்த நாடு
வயந்தகன் – உதயணனின் அமைச்சன்
வயவன் – தீய நிமித்தம் காட்டும் பறவை
வராகன் – உதயணன் வாசவத்தையோடு யானை மேலேறி வந்த போது தடுத்த வீரன் தத்தையைக் காப்பவன்
வருடகாரன் — தருசகனின் அமைச்சன்
வாசவதத்தை – உதயணனின் முதல் மனைவி
விக்கிரன் – உதயணனின் தாய் மாமன்
விச்சுவலேகை- வாசவதத்தையின் தோழி பந்தாட்டத்தில் வல்லவள்
விசயவரன் – உருமண்ணுவா அமைச்சனின் தந்தைக்குத் தோழன்
விசயார்த்தம்- சீதரம் என்னும் நகரத்தைச் சார்ந்த மலை
விண்ணுத்தராயன்- யூகிக்கு மெய்காப்பாளனாக உதயணன் அனுப்பினான்
விபுலமலை – உதயணன் பிறந்து வளர்ந்த இடம்,
விரிசிகன் – தருசகனின் பகையரசன்
விரிசிகை – அரசமுனிவன் ஒருவனின் மகள். உதயணனின் நான்காவது மனைவி
வேகவதி- மானசவேகனின் தங்கை நரவாணனின் மனைவி
வேசாலி - தருசகனின் பகையரசன்
வைசாலி – உதயணன் முதலில் தாய் மாமன் ஆசைப்படி ஆட்சி புரிந்த நாடு
வையாக்கிரம்- யூகிக்கு உதயணன் கொடுத்த தேர்

மேற்கோள் கருவிநூல்

  • கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை, பகுதி 1, 2, 3, 4 , உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம் பதிப்பு, பெசண்ட் நகர், சென்னை 90 - பதிப்பு, ஆண்டு 2000.
"https://tamilar.wiki/index.php?title=பெருங்கதைப்_பெயரடைவு&oldid=18586" இருந்து மீள்விக்கப்பட்டது