புள்ளன்
Jump to navigation
Jump to search
புள்ளன் வரகுண வர்மன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டின் படைத்தலைவனாகவிருந்தான். நக்கன் என்பவனின் மகனான இவன் பராந்தகப் பள்ளி வேளாண் என்ற பட்டத்தினைப் பெற்றவனும் ஆவான். இடவைப்போர் வெற்றிக்குப் படையெடுத்தவன், திண்டுக்கல்லுக்கு அருகில் இராமநாதபுரத்தில் குளம் அமைத்தான் என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]