புருடோத்தம நம்பி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புருடோத்தம நம்பி, பன்னிரு சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார்.

சிவன் மீது பற்று

இவர் வைணவக் குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும்.[1] நடராசரையே வழிபட்டுக்கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்தார்.

சிதம்பரம்

இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.

காலம்

இவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
"https://tamilar.wiki/index.php?title=புருடோத்தம_நம்பி&oldid=14224" இருந்து மீள்விக்கப்பட்டது