பிஸ்ராம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பிஸ்ராம்
பிறப்புபிஸ்ராம்
1907
சியாராம்பூர், ஆசம்கர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
இறப்பு1950
தொழில்
  • கவிஞர்
  • பாடகர்
  • எழுத்தாளர்
மொழி
தேசியம்இந்தியர்
காலம்பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு, சுதந்திர இந்தியா

பிஸ்ராம் (1907-1950) ஒரு இந்திய போச்புரி மொழி எழுத்தாளர், பாடகர் மற்றும் கவிஞர் ஆவார், அவர் பிரஹா கவிதைகளுக்கு பெயர் பெற்றவர்.

வாழ்க்கை

இவர் 1907ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் ஆசம்கர் அருகே உள்ள சியாராம்பூர் கிராமத்தில் பிறந்தார்.[1] இவரின் தந்தை பெயர் விபூதி ராய். ஆரம்ப கல்வியை முடித்ததும் விவசாயத்தில் தந்தைக்கு உதவ துவங்கினார். அதேநேரத்தில் தான் இவர் பிரஹாவை கற்றுக்கொண்டார். இவர் 1925இல் திருமணம் புரிந்து கொண்டார். இவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிமோனியா காய்ச்சலால் இறந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இவர் தனிமையில் வாழத் தொடங்கினார், தனிமையில் பாடத் தொடங்கினார், மற்றும் இவரது இதயத்தை அமைதிப்படுத்த பிரஹா எழுதத் தொடங்கினார். பின்னர், கலவரங்களில்க் கூட பாடல்களை பாடத்துவங்கவே, இவர் ஆசம்கர் மாவட்டத்தில் புகழ் பெற்றார். இவர் 1950இல் திசு தடிமனாதல் காரணமாக இறந்தார்.[2]

குறிப்புகள்

  1. உபாத்தியாய, கிருஷ்ணதேவ் (1960). போச்புரி உலக இலக்கியம் - ஒரு ஆய்வு. p. 71.
  2. பிஸ்ராம் என்பது பிர்ஹே. போச்புரி சமாசது. 1965.
"https://tamilar.wiki/w/index.php?title=பிஸ்ராம்&oldid=440321" இலிருந்து மீள்விக்கப்பட்டது