பாத்தியம்
Jump to navigation
Jump to search
பாத்தியம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.
இந்த உபாசார முறையில் மூல மந்திரத்தினை உச்சரித்து, மூர்த்தியின் திருவடிகளில் தீர்த்தம் சமர்ப்பித்தலாகும். பாத்தியம் என்பது சிவபெருமானுடைய திருவடியில் பொருந்தும் குறியாகவும் அறியப்படுகிறது.
கருவி நூல்
சைவ சமய சிந்தாமணி - கா அருணாசல தேசிகமணி பூசைக்கிரியைகள்