பரணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பரணன்
பரணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பரணன்
பிறந்ததிகதி ஏப்ரல் 9 1944
பிறந்தஇடம் பொந்தியான்
ஜோகூர்
மலேசியா
அறியப்படுவது எழுத்தாளர்

பரணன் (பிறப்பு: ஏப்ரல் 9 1944), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் நகரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கோழிக்கோடு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை செம்பவாங்கிலும் பெற்றார்.

தொழில்

தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கறிந்த இவர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றினார்.

இலக்கியப் பணி

இவர் மரபுக் கவிதை எழுதுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தவர். புதுக்கவிதை, புதினம், கட்டுரை என பல்துறைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவரது முதல் ஆக்கம் என்னை நான் கண்டேன் எனும் தலைப்பில் தமிழ் முரசில் வெளியானது.

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=பரணன்&oldid=6022" இருந்து மீள்விக்கப்பட்டது