திருமாவளவன் (கவிஞர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருமாவளவன் (கவிஞர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
திருமாவளவன் (கவிஞர்)
பிறந்ததிகதி 1955
இறப்பு 5 அக்டோபர் 2015

திருமாவளவன் (1955 - 5 அக்டோபர் 2015)[1] இலங்கைக் கவிஞர்.[2][3] இவரது இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யூனியன் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் கட்டிட தொழில்நுட்ப மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். மறைந்த கலைச்செல்வனின் சகோதரர். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்தவர்.[3]

வெளிவந்த நூல்கள்

  • யுத்தத்தைத் தின்போம் 1999 (மூன்று கவிகளின் தொகுப்பு)[3]
  • பனிவயல் உழவு 2000 எக்ஸில் வெளியீடு, பிரான்ஸ்.[3]
  • அஃதே இரவு அஃதே பகல் 2003 மூன்றாவது மனிதன் வெளியீடு, இலங்கை.[3]
  • இருள்யாழி 2008, காலச்சுவடு வெளியீடு.[3]

இதழியல் பங்களிப்பு

கனடாவில் இருந்து வெளிவந்த 'ழ'கரம் (1996-1997) சிற்றிதழின் இணையாசிரியராக இருந்தார்.

விருது

கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் திருமாவளவனின் 'இருள்யாழி' கவிதைநூலுக்கு பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் ஞாபகார்த்த விருது வழங்கியது.[3]

மறைவு

திருமாவளவன் புற்றுநோயின் தாக்கிய நிலையில்,[2] 2015 அக்டோபர் 5 ஆம் நாள் டொராண்டோ, இசுக்கார்பரோ நகரில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்ப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திருமாவளவன்_(கவிஞர்)&oldid=8641" இருந்து மீள்விக்கப்பட்டது