தாமசு எசு. அனந்தராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தாமசு எசு. அனந்தராமன் (Thomas Anantharaman) கணினி புள்ளிவிவர நிபுணர் ஆவார். இவர் என்பி- முழுமையான சிக்கல்களுக்கான பேய்சியன் அனுமான அணுகுமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். 1985 முதல் 1990 வரை கார்னிகி மெல்லன் பல்கலைக்கழக பெங்-ஹிசியுங் ஹுசு உடன் இணைந்து சதுரங்கம் விளையாடும் கணினிகளில் சிப் சோதனை மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றில் மேற்கொண்ட ஆய்விற்காக மிகவும் பிரபலமானவர். இந்த ஆய்வுகளினால் இவருக்கு 1990ஆம் ஆண்டு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு, "கணினி சதுரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தபட்ச-அதிகபட்ச தேடலின் புள்ளிவிவர ஆய்வு" என்பதாகும். இந்த ஆய்வானது 1997ஆம் ஆண்டில் உலக வாகையரான காரி காஸ்பரோவினை ஐபிஎம் சதுரங்க கணினியில் (ஆழ்ந்த நீலம்) தோற்கடிக்க அடிப்படையாக அமைந்தது.

அனந்தராமன் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் (இப்போது இந்திய தொழில்நுட்பக் கழகம் வாரணாசி ) 1982இல் மின்னணுவியலில் பெற்றார்.[1] இவர் (1977 இல்) இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 2ஆம் தரவரிசையினைப் பிடித்தார். அனந்தராமன் அமெரிக்காவுக்குச் சென்று கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர்ந்தார். இங்குச் சதுரங்கம் விளையாடும் கணினிகளான சிப்டெஸ்ட் மற்றும் டீப் தாட் உடன் பெங்-ஹிசியுங் ஹுசுவுடன் பணிபுரிந்தார். அனந்தராமன் 1990ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தினைப் பெற்றார். பின்னர் உயிரிதொழில்நுட்பவியல் துறையில் சேர்ந்தார். மேலும் பெங்-ஹிசியுங் ஹுசுவுடன் இணைந்து ஐபிஎம்மில் டீப் ப்ளூ ஐபிஎம் மீத்திறன் கணினியினை வடிவமைக்க இணைந்தார்.

1985ஆம் ஆண்டில், கார்னகி மெலன் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் பெங்-ஹிசியுங் ஹுசு, அனந்தராமன், முர்ரே காம்ப்பெல் மற்றும் ஆண்ட்ரியாஸ் நோவாட்ஸிக் ஆகியோர் சிப் டெஸ்ட் என்று அழைக்கப்படும் சதுரங்கம் விளையாடும் இயந்திரத்தை ஒன்றாக இணைக்க இவர்கள் கண்டுபிடித்த உதிரி சில்லுகளைப் பயன்படுத்தினர். 1987-ல், தேடல் உத்திகளைப் பற்றிய சில புதுமையான யோசனைகளை ஒருங்கிணைக்கும் இயந்திரம், கணினி சதுரங்க வாகையராக மாறியது. ஆழ் சிந்தனை (டீப் தாட்), இரண்டு சிறப்பு-நோக்க சில்லுகளைப் பயன்படுத்துகிறது, மேலும் சுமார் 200 இணை சிப்புகள், இணையாக பணியாற்றி, சதுரங்ககிராண்ட்மாஸ்டர்-நிலையினை அடைந்தது.[2]

இந்த பணியினைத் தொடர்ந்து, அனந்தராமன் உயிர்புள்ளியியல் துறையில் தனது கவனத்தைச் செலுத்தினார். ஒற்றை மூலக்கூறு ஒளி படமிடல் தொழில்நுட்பங்களின் பகுப்பாய்விற்கு பேய்சியன் முறைகளைப் பயன்படுத்துவதை மையப்படுத்தினார். தற்போது இவர் விஸ்கான்சின், மேடிசன் ஓப்ஜென் ஒருங்கிணைப்பு நிறுவனத்தில் மூத்த உயிரிதகவல்நுட்பவியல் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்கள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தாமசு_எசு._அனந்தராமன்&oldid=25814" இருந்து மீள்விக்கப்பட்டது