தமிழ் நடை
Jump to navigation
Jump to search
ஒரு மொழியின் இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. உரைநடையின் கருத்துத் தெளிவிற்கு இந்த நெறிமுறைகள் உதவுகின்றன. இந்த நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் நூல் நடைக் கையேடு (Manual of Style) என்று அழைக்கப்படுகிறது.
தமிழ் அறிஞர்கள் பலரின் துணையோடு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), தமிழ்ப் பல்கலைக் கழகம் (தஞ்சாவூர்), மொழி அறக்கட்டளை (சென்னை) ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து, 2001ஆம் ஆண்டு தமிழ் நடைக் கையேடு என்னும் நூலை வெளியிட்டன. 2004இல் அந்நூலின் மறு பதிப்பு வெளியானது. இந்நூலில் தரப்படுகின்ற நெறிமுறைகளை எளிமைப் படுத்தி வழங்குவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.