ச. முனிசுவாமிப் பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ச. முனிசுவாமிப் பிள்ளை
ச. முனிசுவாமிப் பிள்ளை
இயற்பெயர்/
அறியும் பெயர்
ச. முனிசுவாமிப் பிள்ளை
பிறந்ததிகதி 1903
பிறந்தஇடம் இலங்கை
இறப்பு (அகவை 53)
அறியப்படுவது தமிழறிஞர், நாடகாசிரியர், ஆசிரியர்

ச. முனிசுவாமிப் பிள்ளை (S. Muniswami Pillai; 1903 - நவம்பர் 10, 1956, டர்பன்) இலங்கையில் பிறந்து தென்னாப்பிரிக்காவிற் தமிழ்ப்பணி புரிந்த தமிழறிஞரும், நூலாசிரியரும், பத்திரிகாசிரியரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

1903 ம் ஆண்டில் இலங்கையில் சி. சங்கரன்பிள்ளை, ஆதிலட்சுமி ஆகியோருக்குப் பிறந்த இவர்,[2] தென்னாப்பிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார்.[1] டர்பன் நகரில் தமிழ்க் கழகங்களை ஏற்படுத்தியதுடன், தென்னாப்பிரிக்கத் தமிழர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2] அங்குள்ள தமிழ்ப் பாடசாலையில் தலைமை ஆசிரியராகவும் பணியற்றினார்.[2] பராசர மலர், செந்தமிழ்ச் செல்வன், தமிழ் மணி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவிருந்து பணியாற்றினார். பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[1] சில நாடக நூல்களைத் தமிழில் எழுதியும், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தென்னாப்பிரிக்காவில் தமிழ் மாணவர்கள் நடிப்பதற்கு வழங்கினார்.[2][1] இவர் எழுதி நடிக்கப்பெற்ற 'இளங்கோவன்', 'சந்திரசேகரன்', பல்வைத்திய நிபுணர்', 'வெனிசு தேசத்து வணிகன்', 'மதிவாணன்', 'காணாமற்போன கணையாழி', 'துர்ச்செயலின் முடிவு' ஆகிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.[2] பாலர் பாடல் என்னும் செய்யுள் நூலை மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டார். பாரதியார் நாள் முதன் முதலாகத் தென்னாபிரிக்காவில் இவரின் முயற்சியாலேயே கொண்டாடப்பட்டது.[1] தமிழ்நாடு மற்றும் இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 டர்பன் ச. முனிசாமிப்பிள்ளை, ஸ்ரீலங்கா, சனவரி 1957
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "தென்னாபிரிக்கா தமிழர்". சுதேசமித்திரன். மார்ச் 14, 1937. 
"https://tamilar.wiki/index.php?title=ச._முனிசுவாமிப்_பிள்ளை&oldid=26250" இருந்து மீள்விக்கப்பட்டது