சி. தாதுலிங்க முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ராவ் பகதூர் சின்னகாவனம் தாதுலிங்க முதலியார் (C. Tadulinga Mudaliar) அல்லது சி. தாதுலிங்கம் (1878 – 1954) என்பவர் இந்தியத் தாவரவியலாளர் ஆவர். இவர் சில தென்னிந்தியப் புற்கள் ஒரு கையேடு எனும் புத்தகத்தினை இந்தியத் தாவரவியல் அறிஞர் கா. இரங்காச்சாரியுடன் இணைந்து எழுதினார். இந்த புத்தகம் தாவரவியலில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. முதலியார் 1942-43ல் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

1878ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில்[2] பிறந்த முதலியார் கோவையில் உள்ள வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.[3]

முதலியார் 1921ஆம் ஆண்டில் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் கே.ரங்காச்சாரியுடன் சேர்ந்து சில தென்னிந்தியப் புற்கள் குறித்த ஒரு கையேட்டை எழுதினார். இது தாவரவியலாளரிடம் பாராட்டைப் பெற்றது.[2] இவர் லின்னியன் சொசைட்டியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு "ராவ்பகதூர்" பட்டம் வழங்கப்பட்டது.

அரசியல்

1942இல் சென்னை மாநகரத் தந்தையாக வி. சக்கரை செட்டியாரை தொடர்ந்து பொறுப்பேற்றார்.[1] இவர் 1943 வரை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். இவருக்குப் பிறகு சையத் நியாமத்துல்லா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[1]

இறப்பு

முதலியார் 1954இல் தனது எழுபத்தைந்து வயதில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 S. Muthiah, தொகுப்பாசிரியர் (2008). "Appendix 2". Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. 1. Palaniappa Brothers. பக். 438. 
  2. 2.0 2.1 "HUH Botanist Record". Harvard University. http://kiki.huh.harvard.edu/databases/rdfgen.php?uuid=3baab394-e14c-49d6-87bc-06e970a501f3. 
  3. Calendar of the University of Madras. University of Madras. 1915. பக். 45. 
  4. The Madras Journal of Co-operation. 46. 1954. p. 192. 

வெளி இணைப்புகள்

முன்னர்
வி. சக்கரை செட்டியார்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1943-1944
பின்னர்
சையத் நியாமத்துல்லா
"https://tamilar.wiki/index.php?title=சி._தாதுலிங்க_முதலியார்&oldid=27427" இருந்து மீள்விக்கப்பட்டது