சிறைக்குடி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சிறைக்குடி என்னும் ஊர் சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கியது. ஆந்தையார் என்னும் புலவர் அக்காலத்தில் அவ்வூரில் வாழ்ந்தவர். இவரைச் சிறைக்குடி ஆந்தையார் என்றே வழங்கிவந்தனர்.

சிறை என்னும் சொல் பக்கம் என்னும் பொருளைத் தரும். இந்த வகையில் இந்த ஊர் மதுரை போன்ற பேரூர் ஒன்றின் பக்கத்தில் அவ்வூரின் பகுதியாக விளங்கியது எனலாம்.

"https://tamilar.wiki/w/index.php?title=சிறைக்குடி&oldid=361939" இலிருந்து மீள்விக்கப்பட்டது