சாரதா மடம்
Jump to navigation
Jump to search
சாரதா மடம் என்பது ஸ்ரீ நாராயணகுரு அவர்களால் கேரளத்தில் உள்ள சிவகிரி (கேரளா) எனும் இடத்தில் சரஸ்வதியின் கோவிலை நிர்மாணித்த இடமாகும். இது வற்கலை என்ற ஒரு ஊரின் அருகில் உள்ளது. சுபதினமான ஏப்ரல் 1912 அன்று, பௌர்ணமி கூடிவந்த நாளன்று, குருதேவர் அவர்கள் இந்தக் கோவிலில் அன்னை சரஸ்வதியின் சிலையை சாரதா மடத்தில் பிரதிஷ்டை செய்தார். சாரதா பிரதிஷ்டைக் குழுவின் தலைவராக டாக்டர் பால்பு அவர்கள் தலைமை தாங்கினார். மஹாகவி குமாரன் ஆசான் அதன் செயலாளராக இருந்தார்.