குமரகுருபரன் (கவிஞர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குமரகுருபரன் (கவிஞர்)
குமரகுருபரன் (கவிஞர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
குமரகுருபரன்
பிறந்ததிகதி 1974
பிறந்தஇடம் திருநெல்வேலி, தமிழ்நாடு
இறப்பு 19 சூன் 2016 (அகவை 41–42)
தேசியம் இந்தியர்
அறியப்படுவது கவிஞர்
குறிப்பிடத்தக்க விருதுகள் தமிழ் இலக்கியத் தோட்ட விருது (2015)

குமரகுருபரன் (1974 - சூன் 19, 2016) தமிழகக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் புகைப்படத்திற்கு நன்றி venuvanam.com. இவர் குமுதம், தினமலர், விண்நாயகம் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.[1] கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் இவரது மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்ற நூலுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான கவிதைப் பரிசை வழங்கிக் கௌரவித்தது.[2]

வாழ்க்கைக் குறிப்பு

குமரகுருபரன் தமிழ்நாடு, திருநெல்வேலியில் 1974 இல் பிறந்தவர்.[3] கால்நடை மருத்துவம் படித்தவர்.[4] அந்திமழை என்ற இதழுக்காக ஆனந்த விகடனின் சிறந்த மாணவ ஆசிரியர் என்ற விருதைப் பெற்றார்.[3] இதழியலில் ஏற்பட்ட ஆர்வத்தால்,[4] குமுதம், விண்நாயகன், தினமலர் ஆகிய இதழ்களில் பணியாற்றினார்.[3]

வெளிவந்த நூல்கள்

  • ஞானம் நுரைக்கும் போத்தல் (கவிதைகள், 2014)
  • மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது (கவிதைகள்)[5]
  • இன்னொருவனின் கனவு (கட்டுரைத் தொகுப்பு)
  • பயணிகள் கவனிக்கவும் (பயண நூல்)

விருதுகள்

  • சிறந்த கவிதை நூலுக்கான தமிழ் இலக்கியத் தோட்ட விருது.[2]
  • சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான 2015 ராஜமார்த்தாண்டன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது,[6] ஆனால் குமரகுருபரன் அதனை வாங்க மறுத்து விட்டார்.[1]

மறைவு

குமரகுருபரன் தனது 42வது அகவையில் 2016 சூன் 19 அன்று அதிகாலையில் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "கவிஞர் குமரகுருபரன் மறைவு". பத்திரிகை.காம். https://www.patrikai.com/kumarakuruparan-death/. பார்த்த நாள்: 20 சூன் 2016. 
  2. 2.0 2.1 "விடுபூக்கள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்". தி இந்து தமிழ். 19 சூன் 2016. http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8748445.ece. பார்த்த நாள்: 20 சூன் 2016. 
  3. 3.0 3.1 3.2 "இயல் விருது விழா 2015". http://tamilliterarygarden.com/files/book_2015.pdf. பார்த்த நாள்: 19 சூன் 2014. 
  4. 4.0 4.1 "குமரகுருபரன் அஞ்சலி". http://www.jeyamohan.in/88465#.V2dOZjWFlpt. பார்த்த நாள்: 20 சூன் 2016. 
  5. "குமரகுருபரன் எழுதிய 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' கவிதை நூலின் வெளியீட்டு விழா - shruti.tv". shruti.tv. http://www.shruti.tv/?p=7772. பார்த்த நாள்: 20 சூன் 2016. 
  6. "குமரகுருபரனுக்கு ராஜமார்த்தாண்டன் விருது". http://www.jeyamohan.in/79111#.V2dQ9jWFlps. பார்த்த நாள்: 20 June 2016. 
"https://tamilar.wiki/index.php?title=குமரகுருபரன்_(கவிஞர்)&oldid=9240" இருந்து மீள்விக்கப்பட்டது