எர்பர்ட் தம்பையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீதிபதி
ஹெர்பர்ட் தம்பையா
Herbert Thambiah
இலங்கையின் 39வது தலைமை நீதிபதி
பதவியில்
1991–1991
நியமித்தவர் ரணசிங்க பிரேமதாசா
முன்னவர் பரிந்த ரணசிங்க
பின்வந்தவர் ஜி. பி. எஸ். டி சில்வா
இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதிபதி
பதவியில்
1984–1992
தனிநபர் தகவல்
பிறப்பு (1926-10-14)14 அக்டோபர் 1926
இறப்பு 4 அக்டோபர் 1992(1992-10-04) (அகவை 65)
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கை சட்டக் கல்லூரி
இலங்கைப் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர்
இனம் இலங்கைத் தமிழர்

நீதிபதி எர்பர்ட் தர்மராஜா தம்பையா (Herbert Dharmarajah Thambiah, 14 அக்டோபர் 1926 – 4 அக்டோபர் 1992) இலங்கையின் ஒரு முன்னணி நீதிபதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், இலங்கைத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தம்பையா 1926 அக்டோபர் 1926 இல் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சி. ஆர். தம்பையா என்பவருக்குப் பிறந்தார்.[1] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கல்கிசை சென் தோமசு கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[1] பள்ளிப் படிப்பின் பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1] சிறிது காலம் யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர்[1] இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1954 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக வெளியேறினார்.[1]

தம்பையா ரஞ்சி அப்பாத்துரை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சாவித்திரி என்ற ஒரு மகள் உள்ளார்.[1]

பணி

சட்டக் கல்லூரியில் இருந்து வெளியேறிய தம்பையா சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் நீதித் துறையில் இணைந்தார்.[1] 1978 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் 1984 இல் மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.[1] 1991 ஆம் ஆண்டில் அன்றைய அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா இவரை தலைமை நீதிபதியாக நியமித்தார்.[2]

தம்பையா 1992 அக்டோபர் 4 அன்று தனது 65வது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Chief Justices of Sri Lanka

"https://tamilar.wiki/index.php?title=எர்பர்ட்_தம்பையா&oldid=28026" இருந்து மீள்விக்கப்பட்டது