எருமை வெளியனார்
Jump to navigation
Jump to search
எருமை வெளியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவர் பாடியனவாக மூன்று பாடல்கள் உள்ளன. அவை அகநானூறு 73, புறநானூறு 273, 303 ஆகியவை. எருமை வெளியனார் மகனார் கடலனார் என்னும் புலவர் இவரது மகன்.
எருமை என்பது ஓர் ஊர். இக்காலத்து மைசூர் சங்ககாலத்தில் எருமையூர் என்னும் தூய தமிழ்ச்சொற் பெயரோடு விளங்கியது. எருமையூரன் என்பவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன் (அகநானூறு 36). இதனால் எருமை என்பது ஓர் ஊர் என்பதைத் தெளிவாக உணரலாம். எருமையை 'மை' என்னும் சொல்லால் சங்கநூல்கள் வழங்குகின்றன.