இரா. கண்ணன்
Jump to navigation
Jump to search
இரா. கண்ணன் (R. Kannan)(இறப்பு 02 திசம்பர் 2022) என்பவர் இந்தியா, தமிழ்நாடு, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார். இவர் பின்னர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றினார்.[1] இவர் சிற்றிலக்கியங்கள் மற்றும் பாட்டியல் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்துள்ளார்.
எழுதிய நூல்கள்
- சிற்றிலக்கிய ஆராய்ச்சி. தொகுதி ஒன்று (2002)[2]
- சிற்றிலக்கிய ஆராய்ச்சி. தொகுதி இரண்டு (2002)
- நவநீதப்பாட்டியல் (2002)
- மாறனகப்பொருள் களவியல் (2003)
- பொருத்தவிளக்கம் (2003)
- அணியிலக்கண வரலாறு (2003)
- எழுகூற்றிருக்கை (2003)
- துயிலெடைநிலையும் கண்படைநிலையும் (2003)
- இந்திரகாளியம் (2004)
- பழம்பெரும் பாட்டியல்கள் (2004)
- வெண்பாப்பாட்டியல் (2005)
- வருணகுலாதித்தன் மடல் (2006)
- புலவராற்றுப்படை (2007)[3]
மேற்கோள்
- ↑ https://m.dinakaran.com/article/News_Detail/993607/amp
- ↑ https://www.nlb.gov.sg/biblio/12130652
- ↑ முனைவர் பாக்யமேரி (2008). வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், அம்பத்தூர், சென்னை -98. pp. ப. 420. ISBN 81 - 234 - 1346 - 7.