ஆள்கூறுகள்: 34°01′44″N 71°15′43″E / 34.029°N 71.262°E / 34.029; 71.262

அலி மஸ்ஜித்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
அலி மஸ்ஜித் கோட்டையின் இன்றையத் தோற்றம்
அலி மஸ்ஜித் கோட்டையின் ஓவியம் (1890 )

அலி மஸ்ஜித் (Ali Masjid) என்பது கைபர் கணவாயின் குறுகலான புள்ளியாகும். இது பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வாவின் கைபர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது லாண்டி கோட்டல் (பெசாவரின் மேற்கு) நகரத்திலிருந்து கிழக்கே 10 மைல் (16 கிமீ) தொலைவில் 3,174 அடி (967 மீ) உயரத்தில் உள்ளது. அலி மஸ்ஜித் அருகே உள்ள கைபரின் அகலம் முன்பு இரண்டு முழுமையாக ஏற்றப்பட்ட ஒட்டகங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு குறுகலாக இருந்தது. ஆனால் பின்னர் அது அகலப்படுத்தப்பட்டது.

பெயர்த் தோற்றம்

இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மது நபியின் உறவினரான அலீயின் நினைவாக இது பெயரிடப்பட்டது. உள்ளூர் பாரம்பரியத்தின் படி இந்த இடத்திற்கு வருகை தந்த அலியின் நினைவாக இங்கு ஒரு மசூதியும் ஒரு விகாரையும் கட்டப்பட்டுள்ளது. அலியின் கையின் அடையாளங்களைக் கொண்ட ஒரு பெரிய கற்பாறையும் இங்குள்ளது. 

வரலாறு

படிமம்:John Burke - aftermath of Ali Masjid.jpg
அலி மஸ்ஜித் போரின் பின்விளைவுகள்
படிமம்:Ali Masjid from Below WDL11473.png
இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போரின் போது அலி மசூதிக்கு கீழே உள்ள பள்ளத்தாக்கு

அலி மஸ்ஜித் கைபர் கணவாயில் மிகக் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இது முகம்மது நபியின் உறவினரும் மருமகனுமான `அலி இபின் அபி தாலிப் (சுமார் 600-661) சன்னதியைக் கொண்டுள்ளது.[1] கடம் மற்றும் அலி மஸ்ஜித் இடையே வர்த்தகப் பாதையில் செல்லும் போது, பயணிகள் சன்னதியில் பிரார்த்தனை செய்து கொள்ள தங்கள் வாகனத்தை இங்கே நிறுத்துவார்கள்.[2]

இப்பகுதி முதலில் ஆப்கானித்தான் அமீரகத்துக்குள் இருந்தது. 1837 ஆம் ஆண்டில் ஆப்கானிய அமீர், தோஸ்த்து முகமது கான் (1793-1863) என்பவரால் அலி மஸ்ஜித் மேலே ஒரு கோட்டை கட்டப்பட்டது. சன்னதியும் கோட்டையும் மிகவும் கரடுமுரடான நிலப்பரப்பில் ஆழமான பள்ளத்தாக்கைக் கண்டும் காணாத வகையில் அமைந்துள்ளது.[1]

அலி மஸ்ஜித் முதல் போர்

அலி மஸ்ஜித் ஆங்கிலேய-ஆப்கான் போர்களின் போது போர்க்களமாக இருந்தது. 1842 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேய-ஆப்கான் போரின் போது, கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. காபூலில் இருந்து பேரழிவுகரமான பின்வாங்கலின் போது, கர்னல் சார்லஸ் வைல்டின் கீழ் இருந்த ஒரு நிவாரணப் படை, கைபர் கணவாய் நுழைவாயிலில் அக்பர் கானின் ஆப்கான் துருப்புக்களால் தாக்கப்பட்டு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரித்தானிய படையினர் கோட்டையை காலி செய்து ஜம்ருதுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[3]

அலி மஸ்ஜித் இரண்டாவது போர்

நவம்பர் 1878 இல், இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போரின் போது, தளபதி சர் சாமுவேல் பிரவுன் தலைமையிலான பெசாவர் பள்ளத்தாக்கு களப் படை, பயாசு முகம்மதுவின் கீழ் ஆப்கானியர்களிடமிருந்து கோட்டையைக் கைப்பற்றியது .[3]

மே 1879 இல், காண்டமாக் உடன்படிக்கையின் மூலம் கைபர் கணவாய் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன் பிறகு கோட்டை பிரித்தானிய இந்தியாவின் கீழ் இருந்தது.[4] ஆங்கிலேயர்கள் பின்னர் அந்த இடத்தில் தங்கள் சொந்த கோட்டையை நிறுவினர். கைபர் கணவாயின் ஒரு முக்கிய இராணுவக் காவல் இடமாக வைத்திருந்தனர். கோட்டையில் ஒரு சிறிய கல்லறை உள்ளது. இதில் இரண்டாம் ஆப்கானித்தான் போரில் வீழ்ந்த பிரித்தானிய வீரர்களின் கல்லறைகள் ஆகும். பள்ளத்தாக்கு சுவர்கள் இங்கு பணியாற்றிய படைப்பிரிவுகளின் அடையாளங்களைக் கொண்டுள்ளன.

சான்றுகள்

  1. 1.0 1.1 Caption of Ali Masjid from Bewlow WDL11473, Library of Congress
  2. Forbes-Lindsay, C.H. (1903). India Past and Present. Henry T.Coates & Co. pp. 15, 16.
  3. 3.0 3.1 Jaques, Tony (2007). Dictionary of Battles and Sieges: A-E. Greenwood Publishing Group. p. 35. ISBN 978-0-313-33537-2. Retrieved 1 November 2011.
  4. Treaty of Gandamak, 26 May 1879: text

34°01′44″N 71°15′43″E / 34.029°N 71.262°E / 34.029; 71.262

"https://tamilar.wiki/w/index.php?title=அலி_மஸ்ஜித்&oldid=260108" இலிருந்து மீள்விக்கப்பட்டது