வைக்கம் சரஸ்வதி

வைக்கம் சரஸ்வதி (Vaikom Saraswathi) தென்னிந்திய கருநாடக இசைப் பாடகியும், திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார்.[1] இவர் பாடிய பல கருநாடக இசைப் பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்துள்ளன.[1] இந்திய வானொலிகளில் 1940கள், 50களில் இவரது கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.[2]

வைக்கம் சரஸ்வதி
வைக்கம் சரஸ்வதி
இயற்பெயர்/
அறியும் பெயர்
வைக்கம் சரஸ்வதி
பிறந்தஇடம் வைக்கம், இந்தியா
பணி கருநாடக இசைப் பாடகி
அறியப்படுவது கருநாடக இசைப் பாடகி, பின்னணிப் பாடகி

வாழ்க்கைக் குறிப்பு

வைக்கம் சரசுவதியின் தந்தை காலட்சேபதிலகம் என அழைக்கப்பட்ட கவாய் விசுவநாத பாகவதர் ஆவார்.[3] கதாகாலட்சேபம் செய்து கொண்டே இசையுலகில் நுழைந்தவர் சரசுவதி. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் மாணவி.[3]

தமிழில் பின்னணிப் பாடல் முறை வரத்தொடங்கிய 1947-ஆம் ஆண்டில், கே. வி. மகாதேவன் வைக்கம் சரஸ்வதியை தன அமராவதி திரைப்படத்திலே பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார்.[1] நடிகை பி. எஸ். சரோஜாவிற்காக கண்டேனடி, உன் திருவருள், அழகை ஆகிய பாடல்களை இத்திரைப்படத்தில் இவர் பாடினார்.[4] 1948 இல் வெளிவந்த ஜம்பம் திரைப்படத்தில் வாரும் இந்த வேளை, சேதி என்ன ஆகிய பாடல்களையும் இவர் பாடினார்.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 கலைமாமணி வாமனன் (29-04-2018). "‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 9". தினமலர் இம் மூலத்தில் இருந்து 2019-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190905130023/http://www.dinamalarnellai.com/web/news/48074. பார்த்த நாள்: 5-09-2019. 
  2. "The Indian Listener" இம் மூலத்தில் இருந்து 2019-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190905130451/https://www.americanradiohistory.com/hd2/IDX-International/Indian-Listener-IDX/IDX/40s/The-Indian-Listener-1945-22-05-1945-OCR-Page-0048.pdf. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2019. 
  3. 3.0 3.1 கானதாசன் (1948-10-31). "வித்வத் மண்டலம்". ஹனுமான்: 40. 
  4. 4.0 4.1 "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வைக்கம்_சரஸ்வதி&oldid=8521" இருந்து மீள்விக்கப்பட்டது