செல்லகணபதி

செல்லகணபதி (பிறப்பு: பிப்ரவரி 10 1941) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், கண்டனூர் எனும் ஊரில் பிறந்த இவர் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “மணக்கும் பூக்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

செல்லகணபதி
செல்லகணபதி
இயற்பெயர்/
அறியும் பெயர்
செல்லகணபதி
பிறந்ததிகதி பிப்ரவரி 10, 1941
பிறந்தஇடம் கண்டனூர்,சிவகங்கை மாவட்டம்

சிறுவர் இலக்கிய எழுத்தாளரான இவர் எழுதிய தேடல் வேட்டை என்ற கவிதை தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி வழங்கும் 2015ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது வென்றுள்ளது.[1]


குழந்தை இலக்கியத் துறைக்குக் கவிஞர் செல்லகணபதி வழங்கியுள்ளவை

  • மலரும் மொட்டுகள் (2001): 3 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான மழலைப் பாடல் தொகுதி.
  • வளரும் பூக்கள் (2002): 9 வயது முதல் 11 முதல் வயது வரையிலான சிறுவர்களுக்கான பாடல் தொகுதி.
  • மணக்கும் பூக்கள் (2006): 12 வயது முதல் 16வயது வரை உள்ள சிறுவர்களுக்கான பாடல் தொகுதி.


மேலும் காண்க

பால சாகித்திய அகாதமி விருதுகள்

மேற்கோள்கள்

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=செல்லகணபதி&oldid=4272" இருந்து மீள்விக்கப்பட்டது