இரமணன் (சொற்பொழிவாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரமணன் (சொற்பொழிவாளர்)
இரமணன் (சொற்பொழிவாளர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
இரமணன் (சொற்பொழிவாளர்)


இரமணன் நெல்லையில் பிறந்தவர். இவர் இசைக்கவி இரமணன் என்று அறியப்படுகிறார் [புகைப்படத்திற்கு நன்றி கவிஞர் vallamaiyaalar.blogspot.com]. இவர் ஒரு தொகுப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர் என பல முகங்கள் கொண்டவர். ‘தி இந்து’ பத்திரிகையில் (சென்னை-பெங்களூரு-மதுரை-பெங்களூரு-சென்னை-விசாகப்பட்டினம்) என்று 28 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் பொதிகை தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவர் அகில இந்திய வானொலியிலும் பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

சில சொற்பொழிவுகள்

  • சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு நடத்தினார்.[1]
  • கோவையில் "பாரதி பார்வையில் கம்பன்" என்ற தலைப்பில் மணி உயர்நிலைப் பள்ளி, நாணி பல்கிவாலா அரங்கில் 2011ல் பேசினார்.[2]

சில கவிதைகள்

பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
சொல்லாண்டு வாழ்க! சுவைபலவும் காண்க!
சோகமே இல்லாத சொர்க்கமாக விரிக!
எல்லோர்க்கும் இடந்தந்தே மிகவிரிந்து வளர்க! இந்த
ஏழைக்கும் இடந்தந்தீர் என்நன்றி ஏற்க!
வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

அறியாமைக்கும் அறிவுக்கும்
இருளுக்கும் ஒளிக்கும்
அழிவுக்கும் தோற்றத்திற்கும்
ப்ரளயத்திற்கும் படைப்புக்கும்
இடையில் இருக்கின்ற இருட்டும் வெளிச்சமுமான நிலை,
அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி!

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம், அவளை
அன்னையெனப்பணிதல் ஆக்கம் என்பான் பாரதி.

சந்திகளின் உருவகம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே ஒரு சந்தி, அது வைகறை
பகலுக்கும் இரவுக்கும் நடுவில் ஒரு சந்தி, அது அந்திப் பொழுது
முதல் சந்திக்கும், இரண்டாவது சந்திக்கும் மத்தியில் ஒரு சந்தி, அது உச்சிப் பொழுது

அது போல, படைப்புக்கும், பிரளயத்துக்கும் இடையே ஒரு சந்தி
பிரளயத்துக்கும், படைப்புக்கும் நடுவே ஒரு சந்தி
தூமாவதி, இந்த இரண்டு சந்திகளைக் குறிக்கிறாள்.

ஒன்று, படைப்புக்கு முந்தைய நிலை.
இரண்டு, அழிவுக்கு முந்தைய நிலை.

உசாத்துணைகள்

வலைத்தளம்

isaikkaviramanan.com பரணிடப்பட்டது 2013-11-26 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இரமணன்_(சொற்பொழிவாளர்)&oldid=9180" இருந்து மீள்விக்கப்பட்டது