யாந்தபு
Jump to navigation
Jump to search

யாந்தபு (Yandabo) மியான்மர் நாட்டின் நடுவில், ஐராவதி ஆற்றின்[1]கரையில் அமைந்துள்ளது. பிரித்தானியர்களுக்கும், பர்மியர்களுக்கு இடையே நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் (1824 - 1826) முடிவில், யாந்தபு கிராமத்தில் வைத்து, பிரித்தானிய இந்திய அரசும், பர்மிய அரசும், 24 பிப்ரவரி1826 அன்று போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டதால், அவ்வுடன்படிக்கைக்கு இக்கிராமத்தின் பெயரால் யாந்தபு ஒப்பந்தம் எனப்பெயராயிற்று.
தொழில்கள்
யாந்தபு கிராமம் நானூறு வீடுகள் கொண்டது. இக்கிராமத்தின் முப்பது வீட்டார்கள் மட்பாண்டம் செய்யும் தொழிலும், மற்றவர்கள் வேளாளான்மை, மீன் பிடித்தல், செங்கல் சூளைக்கு களிமண் மற்றும் விறகு சேகரித்தல் தொழில்களை செய்கின்றனர்.[2]