மேனகை
Jump to navigation
Jump to search
மேனகை என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களில் ஒருத்தியாவர். இவர் விஸ்வாமித்திரரது மனைவியும், சகுந்தலையின் அன்னையுமாவார்.[1][2][3]

விஸ்வாமித்திரர் தவம்
விஸ்வாமித்தர முனிவர் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் கனல் தேவ லோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை உண்டாக்கியது. எனவே தேவ கன்னிகையான மேனகையை விஸ்வாமித்தரர் முன் நடனமாடச் செய்து, முனிவரின் தவத்தினை களைக்க கட்டளையிட்டான். அவ்வாறே மேனகை விஸ்வாமித்திரர் முன் நடனமாடினாள்.
அவளுடைய நடனத்தினால் முனிவரின் தவம் களைந்தது. அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள்.
கருவி
மகாபாரதம் - விஸ்வாமித்ரரும் மேனகையும் | ஆதிபர்வம் - பகுதி 72
காண்க
ஆதாரம்
- ↑ PC Roy Mahabharata link: http://www.holybooks.com/mahabharata-all-volumes-in-12-pdf-files/
- ↑ www.wisdomlib.org (2012-06-16). "Menaka, Menakā, Menake: 19 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-11-02.
- ↑ Devdutt Pattanaik (2000). The Goddess in India: The Five Faces of the Eternal Feminine. Inner Traditions / Bear & Co. p. 67.