பேரெயில்
Jump to navigation
Jump to search
பேரெயில் சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று.
சங்ககாலப் புலவர் பேரெயின் முறுவலார் பேரெயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இந்த ஊர் இக்காலத்தில் மன்னார்குடி வட்டத்தில் ஓசைப்பேரையூர் என்னும் பெயருடன் விளங்குவதாக ரா. பி. சேதுப்பிள்ளை தன் ‘ஊரும் பேரும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நம்பி நெடுஞ்செழியன் என்னும் சங்ககாலப் பாண்டியன் இறந்துபோனபோது அவனுக்காக இரங்கிப் பாடியுள்ளார். [1]
அடிக்குறிப்பு
- ↑ புறநானூறு 239