தெணியான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தெணியான்
Thooniyan.jpg
முழுப்பெயர் கந்தையா
நடேசு
பிறப்பு 06-01-1942
பொலிகண்டி,
வல்வெட்டித்துறை,
இலங்கை
மறைவு 22-05-2022
(அகவை 80)
கரணவாய்,
கரவெட்டி,
இலங்கை
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
கல்வி கரவெட்டி
தேவரையாளி
இந்துக் கல்லூரி
பெற்றோர் கந்தையா,
சின்னம்மா
வாழ்க்கைத்
துணை
மரகதம்

தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசு (6 சனவரி 1942 – 22 மே 2022) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்.

எழுத்துப்பணி

ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் விவேகியில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுதிகள்

  • சொத்து (1984)
  • மாத்து வேட்டி (1990)
  • இன்னொரு புதிய கோணம்
  • ஒடுக்கப்பட்டவர்கள்
  • தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள் (2013)

புதினங்கள்

  • விடிவை நோக்கி (வீரகேசரிப் பிரசுரம், 1973)
  • கழுகுகள் (1981)
  • பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (1989)
  • மரக்கொக்கு (வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994)
  • காத்திருப்பு (1999)
  • கானலில் மான் (2002)
  • தவறிப்போனவன் கதை

குறும் புதினங்கள்

  • சிதைவுகள் (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)
  • பனையின் நிழல்

கட்டுரைத் தொகுதிகள்

  • இன்னும் சொல்லாதவை
  • நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி

விருதுகள்

  • கலாபூஷணம் விருது
  • இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு
  • கு. சின்னப்ப பாரதி அறக்கொடை விருது
  • கொடகே விருது
  • ஆளுநர் விருது
"https://tamilar.wiki/index.php?title=தெணியான்&oldid=2722" இருந்து மீள்விக்கப்பட்டது