அனுரூபா தேவி
| இயற்பெயர் | அனுரூபா தேவி |
|---|---|
| பிறந்ததிகதி | 9 செப்டம்பர்r 1882 |
| பிறந்தஇடம் | சியாம் பசார், கொல்கத்தா |
| இறப்பு | 19 ஏப்ரல் 1958 |
| புனைபெயர் |
|
| பணி | எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
| துணைவர் | சிக்கர்நாத் பந்தோபாத்யாய் |
| பிள்ளைகள் | அம்புஜநாத் பந்தோபாத்யாய்[1] |
அனுரூபா தேவி (Anurupa Debi) (9 செப்டம்பர் 1882 - 19 ஏப்ரல் 1958) ( அனுரூபா தேபி என்றும் அழைக்கப்படுகிறார்) பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் பெங்காலி இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற பெண் புதின ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும், சமூக சேவையாளரும் ஆவார். இவர், பெங்காலி இலக்கியத்தில் கணிசமான முக்கியத்துவம் மற்றும் புகழ் பெற்ற முதல் பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார்.[2]
சொந்த வாழ்க்கை
அனுரூபா தேவி 9 செப்டம்பர் 1882 அன்று அப்போதைய துணை நீதிபதியும் எழுத்தாளருமான முகுந்த முகோபாத்யாய் மற்றும் தோரசுந்தரி தேபி ஆகியோருக்கு கொல்கத்தா சியாம்பசாரில் உள்ள தனது தாய் மாமா வீட்டில் பிறந்தார். சமூக சீர்திருத்தவாதியான பூதேவ் முகோபாத்யாய் இவரது தந்தைவழி தாத்தா ஆவார். இவரது தாய்வழி தாத்தா, நாகேந்திரநாத் பந்தோபாத்யாய் புகழ்பெற்ற பாங்கியா நாட்டியசாலையின் நிறுவனர்-உறுப்பினர்களில் ஒருவர். இவருடைய அக்கா சொரூபா தேவியும் (1879-1922) 'இந்திரா தேவி' என்ற புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருந்த இவரது காலத்தின் புகழ்பெற்ற புதின ஆசிரியர் ஆவார்.[3]
பத்து வயதில், இவர் கூக்லியின் சூச்சுராவில் சிகர்நாத் பந்தோபாத்யா என்பவரை மணந்தார்.[4] பீகாரின் முசாபர்பூரில் இவர்கள் தங்கள் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தைக் கழித்தனர்.
கல்வி
குழந்தைப் பருவத்தில் கடுமையான உடல்நலக் குறைவால், அனுரூபா தேபி சிறிது தாமதமாக கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இவர் படுக்கையில் இருந்தபோது, இவருடைய அக்கா சொரூபா தேவி ஓய்வு நேரத்தை கடக்க காசிதாசி மகாபாரதத்தையும் கிருத்திவாசி ராமாயணத்தையும் ஓதிக் கொண்டிருந்தார். மேலும், அக்கால வழக்கப்படி, தாத்தாவின் ஓய்வு நேரத்தில், இவர்கள் அவருக்கு அருகில் அமர்ந்து ஒவ்வொரு நாளும் மகாபாரதம் மற்றும் இராமாயணத்தின் ஒரு அத்தியாயத்தைக் கேட்பார்கள். இதன் விளைவாக, அனுரூபா தேவி தனது மனதில் அந்த விஷயத்தை எளிதில் உள்வாங்கிக் கொண்டார். இந்த சூழலில், இவர் சொன்னார், "அந்த சமயத்தில் நான் படிப்பறிவில்லாதவலாக இருந்தாலும், நான் இராமாயணம்-மகாபாரதத்தின் பெரும்பாலான கதைகளை மனப்பாடம் செய்ததால், நான் படிக்காதவன் என்று சொல்ல முடியாது. அந்த நேரத்தில் எனக்கு வயது 7. " [5]
இவருடைய அக்காமார்கள் தங்கள் தாத்தாவிடமிருந்து சமசுகிருத கவிதைகளைப் படித்து கவிதை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே, இவரும் தனது தாத்தா, பூதேவ் முகோபாத்யாயா மற்றும் தந்தை முகுந்த முகோபாத்யாயா ஆகியோரின் ஆதரவில் தனது குழந்தை பருவத்தில் கல்வி கற்றார். குழந்தை பருவத்திலிருந்தே கல்வி மற்றும் கற்றல் மீது ஒரு தனி பிரியம் கொண்டிருந்தார். வங்காளம் தவிர, இவர் சமசுகிருதம் மற்றும் இந்தியில் கணிசமான தேர்ச்சி பெற்றார். இவர் பல்வேறு மேற்கத்திய அறிஞர்களின் நிறைய புத்தகங்களைப் படித்தார். எனவே மேற்கத்திய அறிவியல் மற்றும் தத்துவத்துடனும் தொடர்பு ஏற்பட்டது.[3]
பணிகள்
இவர், மார்க்கண்டேய புராணத்தையும், இராமாயணத்தின் ஆரம்ப அத்தியாயத்தையும் ஒரு கவிதை நடையில் வெற்றிகரமாக இயற்றினார். அப்போது இவருக்கு 10 வயதே ஆனது.[3]
தேவி தனது அக்கா, இந்திரா தேவி என்ற புனைப்பெயரில் எழுதுவதைத் தவிர, தனது அக்கா சுருபா தேவியைத் தவிர வேறு யாருக்கும் தனது ஆரம்ப இலக்கிய முயற்சிகளை வெளிப்படுத்தவில்லை.[6] இவரது முதல் படைப்பு குந்தலின் புரஷ்கர் கிரந்தமாலாவில் ராணி தேவி என்ற புனைப்பெயரில் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "Sahitye Nari: Shrastri o Srishti by Anurupa Debi" (PDF).
- ↑ দাশগুপ্ত, মুনমুন. "নারীর অধিকার রক্ষায় অগ্রণী তিনি". anandabazar.com (in Bengali). Retrieved 2020-11-23.
- ↑ 3.0 3.1 3.2 Layek, Raju (July 2013). "বাংলা সাহিত্যের আঙিনায় অনুরূপা দেবী". Pratidhwani the Echo ii (i). http://thecho.in/files/Raju-Layek_3wz47s15.pdf. பார்த்த நாள்: 2021-09-21.
- ↑ "অনুরূপা দেবী কবিতা মিলনসাগর Anurupa Debi Poetry MILANSAGAR". www.milansagar.com. Retrieved 2020-11-22.
- ↑ Devi, Anurupa (2002). Anurupa Devi-r Nirbachito Golpo. Kolkata: Dey's Publishing. p. 175. ISBN 81-7612-997-6.
- ↑ Some of Indira (Surupa) Devi's novels like Sparshamani (1919), Parajita (1921), Pratyabartan (1922) etc.