செங்கம்
| செங்கம் நகரியம் | |
| ஆள்கூறு | 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | வந்தனா கார்க், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 23,200 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 272 மீட்டர்கள் (892 அடி) |
செங்கம் (ஆங்கிலம்:Chengam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும்.
புராதானப் பெயர் :செழுங்கனியூர் , ஆங்கிலேய ஆட்சி பெயர் : செங்கண்மா
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,200 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செங்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செங்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில்


( செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் 700 ஆண்டிற்க்கும் மேல் பழைமையான கோவில் என்று கருதப்படுகின்றது,
இந்த கோவிலின் கட்டிட கலை மற்றும் கட்டிட் அமைப்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் (அருணாச்சலேஸ்வரர்)
கோவிலுக்கு முன்மாதிரி என்று சொல்லப்படுக்கின்றது )
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.
1 முதல்நாள் திருவிழா ஆலப்புத்தூர் நாயுடுகள் சமூகத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் கொடிஏற்றமும் அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.
2வதுநாள் நெல்லை நாடார்கள் சார்பில் நடைபெறும் விழாவில் காலையில் சூரியபிறையிலும், இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது.
3வதுநாள் செங்கம் வட்ட யாதவர்கள் சார்பில் திருகல்யாணம், இரவு அனுமந்தவாகன உலாவும்,
4வதுநாள் செங்கம் நகர போயச்செட்டியார்கள் சார்பில் இரவு நாகவாகன உலா நடக்கிறது.
5வதுநாள் மகாகருட சேவை செங்கம் வட்ட வன்னியர் சார்பில் நடைபெறும் கோபுர தரிசன நிகழ்ச்சியும்,
6வதுநாள் காலை புதுபேட்டை யாதவர்கள் சார்பில் உற்சவம், இரவு இந்து வியாபாரிகள், ஆரிய வைசியர் சமூகம் சார்பில் யானை வாகன உலா நடைபெறுகிறது.
7வதுநாள் செங்கம் வட்ட பண்டரெட்டியார்கள் சார்பில் தேர்திருவிழா காலையில் நடைபெறுகிறது.
8வது நாள் கம்மவார் நாயுடுகள் சார்பில் இரவு குதிரை வாகனம்,
9வதுநாள் செங்கம் வட்ட கவரைநாயுடுகள் சார்பில் இரவு இந்திர விமானத்தில் சுவாமி திருவீதிஉலா நடக்கிறது.
10வதுநாளில் நடைபெறும் திருவிழா வருவாய்துறை, வனத்துறை, மற்றும் தேவஸ்தானம் சார்பில் காலையில் செய்யாற்றங்கரையில் சுவாமி தீர்த்தவாரியும் மாலையில் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவினையொட்டி கோயிலில் வண்ண மின்விளக்குகள், வாணவேடிக்கை, நையாண்டிமேளம், கரகாட்டம், அன்னதானம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் உபயதார்கள் செய்து வருகின்றனர்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Chengam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)