க. ரத்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "{{தகவற்சட்டம் நபர் |name = க. ரத்னம் |image = |caption = பறவையியலாளர் |birth_name = |birth_date = {{birth date|1931|12|13}} |birth_place = கீரணத்தம், கோயம்புத்தூர் மாவட்டம் |death_date = |death_place = |death_cause = |resting_place..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>KiranBOT URL களில் இருந்து AMP கண்காணிப்பை அகற்றியது (விவரங்கள்) (பிழையைப் புகாரளிக்கவும்) v2.2.7s rf_ap |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 28: | வரிசை 28: | ||
|website= |
|website= |
||
|}} |
|}} |
||
'''க. ரத்னம்''' (பிறப்பு: [[டிசம்பர் 13]], [[1931]]) என்பவர் தமிழக எழுத்தாளர். இவர் முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவர் பின்னாளில் பறவையியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக “தென்னிந்தியப் பறவைகள்” எனும் நூலைப் படைத்தார். இவர் எழுதிய ''"தமிழ்நாட்டுப் பறவைகள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் |
'''க. ரத்னம்''' (பிறப்பு: [[டிசம்பர் 13]], [[1931]]) என்பவர் தமிழக எழுத்தாளர். இவர் முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவர் பின்னாளில் பறவையியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக “தென்னிந்தியப் பறவைகள்” எனும் நூலைப் படைத்தார். இவர் எழுதிய ''"தமிழ்நாட்டுப் பறவைகள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.{{cn}} |
||
==வாழ்க்கை== |
==வாழ்க்கை== |
||
க. ரத்னம் [[கோயம்புத்தூர் மாவட்டம்| |
க. ரத்னம் [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]],கோவைக்கு அருகில் உள்ள கீரணத்தம் எனும் ஊரில் பிறந்தார். |
||
==கல்வி== |
==கல்வி== |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
* இடைநிலைப்படிப்பை கோவை அரசு கலைக் கல்லூரியில் பயின்றார். |
* இடைநிலைப்படிப்பை கோவை அரசு கலைக் கல்லூரியில் பயின்றார். |
||
* முதுகலைத் தமிழ் இலக்கியத்தை [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பன் கல்லூரியில்]] படித்தார் (1952-55). அப்பொழுது [[மு. வரதராசன்]], [[க. அன்பழகன்]], [[ரா.பி. சேதுப்பிள்ளை]] போன்றோர் இவருக்கு ஆசிரியர்கள். |
* முதுகலைத் தமிழ் இலக்கியத்தை [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பன் கல்லூரியில்]] படித்தார் (1952-55). அப்பொழுது [[மு. வரதராசன்]], [[க. அன்பழகன்]], [[ரா.பி. சேதுப்பிள்ளை]] போன்றோர் இவருக்கு ஆசிரியர்கள். |
||
* [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] இரா. சண்முகம் என்பவரின் வழிகாட்டலில் "சங்க அகத்திணைப் பாடல்களில் கூற்று" என்ற பொருண்மையில் ஆய்வுசெய்து 1978ஆம் ஆண்டில் [[முனைவர்]] பட்டம் பெற்றவர். |
* [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] இரா. சண்முகம் என்பவரின் வழிகாட்டலில் "சங்க அகத்திணைப் பாடல்களில் கூற்று" என்ற பொருண்மையில் ஆய்வுசெய்து 1978ஆம் ஆண்டில் [[முனைவர்]] பட்டம் பெற்றவர். |
||
==தொழில்== |
==தொழில்== |
||
1955 முதல் 1989 வரை <ref name = "thadam"/>பின்வரும் அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். |
1955 முதல் 1989 வரை <ref name = "thadam"/> பின்வரும் அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். |
||
# அரசு கலைக் கல்லூரி, [[கும்பகோணம்]] |
# அரசு கலைக் கல்லூரி, [[கும்பகோணம்]] |
||
# அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, [[முசிறி]] |
# அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, [[முசிறி]] |
||
| வரிசை 47: | வரிசை 47: | ||
== பறவையியலாளர்== |
== பறவையியலாளர்== |
||
தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவருக்கு, "ஹவ் டூ வாட்ச் பேர்டு?" (How to Watch Birds by Roger Barton) என்னும் அமெரிக்க பறவைகள் பற்றிய ஆங்கில புத்தகத்தைப் படித்ததிலிருந்து பறவையியல் மீது ஆர்வம் கொண்டார். 1965லிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பறவைகளைக் காண்பதற்காக பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in |
தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவருக்கு, "ஹவ் டூ வாட்ச் பேர்டு?" (How to Watch Birds by Roger Barton) என்னும் அமெரிக்க பறவைகள் பற்றிய ஆங்கில புத்தகத்தைப் படித்ததிலிருந்து பறவையியல் மீது ஆர்வம் கொண்டார். 1965லிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பறவைகளைக் காண்பதற்காக பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/155161-.html|title=பறவைக் காதலரான எழுத்தாளர்|website=தி இந்து தமிழ் திசை|access-date=2022-05-14}}</ref> |
||
== படைப்பாளர்== |
== படைப்பாளர்== |
||
| வரிசை 77: | வரிசை 77: | ||
# தமிழ்நாட்டு மூலிகைகள் (மருத்துவம்); மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். |
# தமிழ்நாட்டு மூலிகைகள் (மருத்துவம்); மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். |
||
# தமிழ்நாட்டுப் பறவைகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். (தென்னிந்தியப் பறவைகள் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு); 2004 (தமிழ்நாட்டரசின் பரிசு பெற்றது) |
# தமிழ்நாட்டுப் பறவைகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். (தென்னிந்தியப் பறவைகள் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு); 2004 (தமிழ்நாட்டரசின் பரிசு பெற்றது) |
||
# தென்னிந்தியப் பறவைகள் <ref>http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350247{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. |
# தென்னிந்தியப் பறவைகள் <ref>http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350247{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.<ref name = "thadam"/> |
||
# வலசை போகும் பறவை, 2022; தமிழினி, சென்னை; தன்வரலாறு |
# வலசை போகும் பறவை, 2022; தமிழினி, சென்னை; தன்வரலாறு |
||
| வரிசை 95: | வரிசை 95: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist| 2}} |
{{Reflist| 2}} |
||
| ⚫ | |||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
| ⚫ | |||
[[பகுப்பு: 1931 பிறப்புகள்]] |
|||
[[பகுப்பு: |
[[பகுப்பு:1931 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட மக்கள்]] |
|||
05:03, 5 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
க. ரத்னம் | |
|---|---|
| பிறப்பு | திசம்பர் 13, 1931 கீரணத்தம், கோயம்புத்தூர் மாவட்டம் |
| இருப்பிடம் | சிங்காநல்லூர், கோயம்புத்தூர் |
| தேசியம் | இந்தியா |
| கல்வி | கலைமுதுவர், முனைவர் |
| பணி | தமிழ்ப்பேராசிரியர் |
| பணியகம் | தமிழ்நாட்டரசு கல்லூரிக்கல்வித்துறை |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
க. ரத்னம் (பிறப்பு: டிசம்பர் 13, 1931) என்பவர் தமிழக எழுத்தாளர். இவர் முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவர் பின்னாளில் பறவையியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக “தென்னிந்தியப் பறவைகள்” எனும் நூலைப் படைத்தார். இவர் எழுதிய "தமிழ்நாட்டுப் பறவைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[சான்று தேவை]
வாழ்க்கை
க. ரத்னம் கோயம்புத்தூர் மாவட்டத்தில்,கோவைக்கு அருகில் உள்ள கீரணத்தம் எனும் ஊரில் பிறந்தார்.
கல்வி
- உயர்நிலைக்கல்வி இடிகரை பள்ளியில் பயின்றார்.
- இடைநிலைப்படிப்பை கோவை அரசு கலைக் கல்லூரியில் பயின்றார்.
- முதுகலைத் தமிழ் இலக்கியத்தை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார் (1952-55). அப்பொழுது மு. வரதராசன், க. அன்பழகன், ரா.பி. சேதுப்பிள்ளை போன்றோர் இவருக்கு ஆசிரியர்கள்.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரா. சண்முகம் என்பவரின் வழிகாட்டலில் "சங்க அகத்திணைப் பாடல்களில் கூற்று" என்ற பொருண்மையில் ஆய்வுசெய்து 1978ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தொழில்
1955 முதல் 1989 வரை [1] பின்வரும் அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
- அரசு கலைக் கல்லூரி, கும்பகோணம்
- அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, முசிறி
- சேதுபதி அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம் - 1970 முதல் 1974 வரை
- மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர்[1]
பறவையியலாளர்
தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவருக்கு, "ஹவ் டூ வாட்ச் பேர்டு?" (How to Watch Birds by Roger Barton) என்னும் அமெரிக்க பறவைகள் பற்றிய ஆங்கில புத்தகத்தைப் படித்ததிலிருந்து பறவையியல் மீது ஆர்வம் கொண்டார். 1965லிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பறவைகளைக் காண்பதற்காக பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.[2]
படைப்பாளர்
க. ரத்னம் கல்லூரியில் பயிலும்பொழுதே 'உலகம்' என்ற கையெழுத்து இதழை வெளியிட்டார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்பொழுது படைப்பிலக்கியத்தில் ஈடுபட்ட இவரின் கதையை விந்தன் தனது மனிதன் இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார்.[1] பின்னர் பறவைகளைப்பற்றி கேரவான், தி இந்து, சுதேசமித்திரன் இதழ்களில் எழுதினார். இவரது முதல் சிறுகதை 'விந்தியா' என்ற பாம்பே பத்திரிகையில் வெளியானது.
நூல்கள்
எழுதிய நூல்கள்
- கலைச்சொல் அகராதி: புவியியல் (சி. பார்வதியுடன் இணைந்து); 1960; கல்லூரித்தமிழ்க்குழு, சென்னை அரசாங்கம்.
- கல்லும் மண்ணும் (புதினம்)
- நினைவின் நிழல் (புதினம்)
- கனவு மாலை (புதினம்)
- கதை தொடர்கிறது (புதினம்); 2019; தமிழினி
- சிறகுகள் (சிறுகதைத் தொகுப்பு); 1983 பிப்ரவரி; நறுமலர்ப்பதிப்பகம், சென்னை-29.
- நினைவுப்பற்று (சிறுகதைத் தொகுப்பு)[1]
- அப்பாலுக்கு அப்பால் (சிறுகதை); தமிழினி; 2020
- உருவகக்கதைகள்
- காலத்தேரொலி (வசன கவிதைகள்)
- பேதை நெஞ்சம் (வசன கவிதைகள்); 1960
- வேலியோரத்துப் பூக்கள் (வசன கவிதைகள்); கனவு, திருப்பூர்.
- இவர்களின் பார்வையில் அகலிகை (திறனாய்வு); 2000 (தமிழ்நாட்டரசின் பரிசு பெற்றது)
- சிறுகதைச்சாளரம் (திறனாய்வு)
- சிறுகதை முன்னோடிகள் (திறனாய்வு)
- சங்க இலக்கியத்தில் யானைகள் (திறனாய்வு); மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
- தமிழில் பறவை பெயர்கள்[3] (ஆய்வு), 1988 (தமிழ்நாட்டரசின் பரிசு பெற்றது)
- செம்மொழி இலக்கியத்தில் பறவைகள் [1]
- தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்; தமிழினி; 2014
- கம்பன் எழுதிய ராமகாதையில் பறவைகள் [1]
- திருக்குறள் சொல்லடைவு தமிழ் மற்றும் ஆங்கில விளக்கம்
- தமிழ்நாட்டு மூலிகைகள் (மருத்துவம்); மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
- தமிழ்நாட்டுப் பறவைகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். (தென்னிந்தியப் பறவைகள் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு); 2004 (தமிழ்நாட்டரசின் பரிசு பெற்றது)
- தென்னிந்தியப் பறவைகள் [4] தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.[1]
- வலசை போகும் பறவை, 2022; தமிழினி, சென்னை; தன்வரலாறு
மொழிபெயர்த்த நூல்கள்
- தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - 7 தொகுதிகள்; எட்கர் தர்ஸ்டன்; மானுடவியல்; தமிழ்ப் பலகலைக்கழகம், தஞ்சாவூர். 1983 முதல் 1987 வரை மொழிபெயர்க்கப்பட்டன.
- தென்னிந்திய மானிட இன இயல்; எட்கர் தர்ஸ்டன் (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதிகளின் சுருக்கம்); மெய்ப்பன் பதிப்பகம், சிதம்பரம்;[1]
- டப்ளின் நகரத்தார்; ஜேம்ஸ் ஜாய்ஸ்; புதினம்; தமிழினி; 2015
- திராவிடரின் இந்தியா; டி.ஆர்.சேஷ ஐயங்கார்; மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
- மனப்பிராந்தி; அந்தோன் செகாவ்; சிறுகதைகள்; தமிழினி; 2014
தொகுத்த நூல்கள்
- டாக்டர் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (புலவர் கா. கோவிந்தனுடன் இணைந்து); இ.பதிப்பு 2021; பாரி நிலையம், சென்னை.
குடும்பம்
க. ரத்னம் மரகதம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரட்டையர்களான நிலவி (மருத்துவர்), உலகி (கல்லூரி முதல்வர்) என்னும் பெண் மக்களும் திருவேரகம் (தொழில்முனைவர்), செந்தில் (மென்பொருள் நிறுவனப் பணியாளர்) என்னும் ஆண்மக்களும் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 தர்ஸ்டனின் தமிழ்முகம் - வெ.நீலகண்டன், தடம் 2019 மார்ச் 01
- ↑ "பறவைக் காதலரான எழுத்தாளர்". தி இந்து தமிழ் திசை. Retrieved 2022-05-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-06. Retrieved 2014-10-09.
- ↑ http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350247[தொடர்பிழந்த இணைப்பு]