<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF</id>
	<title>யயாதி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-02T15:01:13Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=479161&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Arularasan. G: Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=479161&amp;oldid=prev"/>
		<updated>2026-01-21T14:11:37Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:Emperor Yayathi.png|thumb|சந்திர குல பேரரசன் யயாதி]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;யயாதி&amp;#039;&amp;#039;&amp;#039; ([[ஆங்கிலம்]]: Yayati; [[சமஸ்கிருதம்]]: ययाति) [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தை]] தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை [[நகுசன்]], நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன். யயாதியின் கதை [[மகாபாரதம்]],&amp;lt;ref&amp;gt;[https://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section75.html யயாதி வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 75]&amp;lt;/ref&amp;gt; [[பாகவத புராணம்]] மற்றும் [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களில்]] மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;[http://www.mythfolklore.net/india/encyclopedia/yayati.htm Yayati]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref name=SunyPress&amp;gt;{{cite book|last=Venkatesananda|title=The Concise Śrīmad Bhāgavataṁ|publisher=[[SUNY Press]]|pages=227–229|url=http://books.google.co.in/books?id=zLkrkjn1Yv0C&amp;amp;pg=PA22}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
யயாதிக்கும்-[[தேவயானி|தேவயானிக்கும்]] பிறந்த மூத்த மகன் [[யது]]வின் வழித்தோன்றல்கள் [[யது குலம்|யாதவர்கள்]] என்றும்; இரண்டாவது மகன் &amp;#039;&amp;#039;&amp;#039;துர்வசு&amp;#039;&amp;#039;&amp;#039;வின் வழித்தோன்றல்கள் [[மூவேந்தர்|சேர, சோழ, பாண்டியர்கள்]]&amp;lt;ref&amp;gt;நூல் பெயர்: அபிதான சிந்தாமணி, பக்கம் எண்: 1599. தலைப்பு: யயாதி வம்சம்.&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;நூல் பெயர்: அபிதான கோசம், பகுப்பு: வம்சாவளி அட்டவணை, தலைப்பு: ஆயு-யயாதி-துர்வசு வரிசை&amp;lt;/ref&amp;gt;, மேலும் இவர்களின் ஒரு கிளையினர் ஒழுக்கங்குன்றி அரேபிய தேசம் அடைந்து &amp;#039;&amp;#039;&amp;#039;யவனர்கள்&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;lt;ref&amp;gt;நூல் பெயர்: அபிதான சிந்தாமணி, பக்கம் எண்: 1355. தலைப்பு: யவனர்.&amp;lt;/ref&amp;gt; ஆயினர் என்றும்; யயாதி-[[சர்மிஷ்டை|சர்மித்தைக்கு]] பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோன்றல்கள் &amp;#039;&amp;#039;&amp;#039;போஜர்கள்&amp;#039;&amp;#039;&amp;#039; என்றும்,  நான்காவது மகன், அனுவின் வழித்தோன்றல்கள்  [[மிலேச்சர்|மிலேச்சர்கள்]] என்றும், ஐந்தாவது மகன் [[புரு]]வின் வழித்தோன்றல்கள் [[பௌரவர்|பௌரவர்கள்]] என்றும் அழைக்கப்பட்டனர்.&amp;lt;ref&amp;gt;http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section95.html#sthash.XszVAyAE.dpuf&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கதையின் உள்ளடக்கம்== &lt;br /&gt;
[[File:DEVJANI RESCUED FROM THE WELL.jpg|thumb|தேவயானியைக் காப்பாற்றும் யயாதி (B. P. பேனர்ஜியின் ஓவியம்)]]&lt;br /&gt;
[[File:Yayati by Aman Varma.jpg|thumb|மன்னன் யயாதியின் ஓவியம்]]&lt;br /&gt;
அசுர மன்னரின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் [[தேவயானி]]யை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். யயாதி -[[தேவயானி]] மூலம் [[யது]],  &amp;#039;&amp;#039;துர்வசு&amp;#039;&amp;#039;  என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அசுர மன்னன் [[விருசபர்வன்]] மகளும் [[தேவயானி|தேவயானியின்]] நெருங்கிய தோழியுமான [[சர்மிஷ்டை|சர்மிஷ்டையை]] யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். [[சர்மிஷ்டை|சர்மித்தைக்கு]] யயாதி மூலமாக &amp;#039;&amp;#039;துருயு&amp;#039;&amp;#039;,  &amp;#039;&amp;#039;அனு&amp;#039;&amp;#039;  மற்றும் [[புரு]] எனும் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இச்செய்தி கேட்ட [[தேவயானி]], யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியிடம்]] தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள். செய்தி அறிந்த சுக்கிராச்சாரி, தன் மகள் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக, மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான். கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் யயாதி தனது முதல் மனைவியான [[தேவயானி]]யின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையை கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கும் உன் தலைமுறையினரும் அத்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது என்று  சாபம் இட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் மற்ற மகன்களான துர்வசு, துருயு, அனு ஆகியோரும் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர். இரண்டாம் மனைவி [[சர்மிஷ்டை|சர்மிஷ்டைக்கு]] பிறந்த கடைசி மகனான [[புரு]] மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக்கொண்டு, புருவை அத்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவியருடன் கானகம் ஏகி நற்றவம் செய்து [[தேவலோகம்]] அடைந்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[தேவயானி]]யின் முதல் மகனான யதுவின் வழித்தோன்றல்களே [[யது குலம்|யாதவர்கள்]]. [[கிருட்டிணன்]] இந்த யாதவ குலத்தில்தான் தோன்றினார். யதுவின் வழித்தோன்றல்கள் [[மதுரா|வடமதுரை]], [[விதர்ப்பதேசம்|விதர்ப்பம்]], [[சேதிதேசம்|சேதி]], [[குந்திதேசம்]], [[துவாரகை]], [[சூரசேனதேசம்]], [[மகததேசம்|மகதம்]] போன்ற நாட்டை ஆண்ட சிற்றரசர்களான  யாதவர்கள். [[கம்சன்]], [[கிருட்டிணன்]], [[பலராமர்]], [[சிசுபாலன்]], [[ஜராசந்தன்]], [[குந்தி]], [[கிருதவர்மன்]], [[சாத்தியகி (கதை மாந்தர்)|சாத்தியகி]], [[உத்தவர்]] ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சர்மிஷ்டை|சர்மித்தையின்]] இளைய மகன் [[புரு]]வின்  வழித்தோன்றல்களே [[பாண்டவர்கள்]] மற்றும் [[கௌரவர்]]கள் ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இதனையும் காண்க==&lt;br /&gt;
* [[நகுசன்]]&lt;br /&gt;
* [[தேவயானி]]&lt;br /&gt;
* [[விருசபர்வன்]]&lt;br /&gt;
* [[சர்மிஷ்டை]]&lt;br /&gt;
* [[யது]]&lt;br /&gt;
* [[யது குலம்|யாதவர்கள்]]&lt;br /&gt;
* [[புரு]]&lt;br /&gt;
* [[பௌரவர்]]&lt;br /&gt;
* [[போரஸ்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==மரபுரிமைப் பேறுகள்==&lt;br /&gt;
[[வி. ச. காண்டேகர்]] என்பவர் யயாதியின் புராணக் கதையை, மராத்திய மொழியில் நாவலாக எழுதியுள்ளார். இதனை [[கா. ஸ்ரீ. ஸ்ரீ]] என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  [[பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய யயாதி எனும் நாடகம்,&amp;lt;ref&amp;gt;https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0426.pdf&amp;lt;/ref&amp;gt;  1938ல் [[யயாதி (திரைப்படம்)|யயாதி திரைப்படமாக]] வெளியானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==குறிப்புதவி நூல்கள்==&lt;br /&gt;
* பாகவத புராணம்&lt;br /&gt;
* வியாசரின் மகாபாரதம்&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்பு==&lt;br /&gt;
* [https://www.vyasaonline.com/2017/01/12/yayati/mahabharata/ Yayati]&lt;br /&gt;
* http://kasturis.lazyreader.com/content/chapter-22-yayati-and-puru {{Webarchive|url=https://web.archive.org/web/20130613142712/http://kasturis.lazyreader.com/content/chapter-22-yayati-and-puru |date=2013-06-13 }}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மகாபாரதம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து தொன்மவியல் மாந்தர்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சந்திர குல மன்னர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Arularasan. G</name></author>
	</entry>
</feed>