<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>பெத்லகேம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T03:14:35Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=447557&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Sumathy1959: /* ஆதாரங்கள் */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=447557&amp;oldid=prev"/>
		<updated>2024-10-02T15:34:51Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;ஆதாரங்கள்&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox Palestinian Authority municipality&lt;br /&gt;
|name=பெத்லகேம், بيت لحم&lt;br /&gt;
|image=Bethlehem_Logo.gif&lt;br /&gt;
|imgsize=&lt;br /&gt;
|caption=பெத்லகேம் நகராட்சி இலச்சினை&lt;br /&gt;
|image3=Belen palestina.jpg&lt;br /&gt;
|imgsize3=250&lt;br /&gt;
|caption3=பெத்லகேமின் ஒரு குடியிருப்புப் பகுதி&lt;br /&gt;
|arname=بيت لحم&lt;br /&gt;
|meaning=&amp;#039;&amp;#039;புலால் வீடு&amp;#039;&amp;#039; (அரபி); &amp;#039;&amp;#039;அப்ப வீடு&amp;#039;&amp;#039; (எபிரேயம்) &lt;br /&gt;
|founded=&lt;br /&gt;
|type=muna&lt;br /&gt;
|typefrom=1995&lt;br /&gt;
|altOffSp=Beit Lahm&lt;br /&gt;
|altUnoSp=Bayt Lahm&lt;br /&gt;
|governorate=bl&lt;br /&gt;
|population=25,266&lt;br /&gt;
|popyear=2007&lt;br /&gt;
|area=&lt;br /&gt;
|areakm=&lt;br /&gt;
|latd=31 |latm=42 |lats=11 |latNS=N&lt;br /&gt;
|longd=35 |longm=11 |longs=44 |longEW=E&lt;br /&gt;
|mayor=[[விக்டர் பட்டர்சே]]&amp;lt;ref&amp;gt;[http://www.elections.ps/pdf/Municipal_Elections_Results_EN_(2).pdf West Bank] {{Webarchive|url=https://web.archive.org/web/20070630094514/http://www.elections.ps/pdf/Municipal_Elections_Results_EN_%282%29.pdf |date=2007-06-30 }} Local Elections ( Round two)- Successful candidates by local authority, gender and No. of votes obtained, Bethlehem p. 23.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
|website=[http://www.bethlehem-city.org/ www.bethlehem-city.org]&lt;br /&gt;
|pushpin_map=Palestinian territories&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;பெத்லகேம்&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;Bethlehem&amp;#039;&amp;#039;) என்னும் நகரம் [[இயேசு|இயேசு கிறிஸ்து]] பிறந்த இடமாகும். இது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனாவில்]] மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் &amp;lt;ref&amp;gt;[http://en.wikipedia.org/wiki/Bethlehem பெத்லகேம் நகர்]&amp;lt;/ref&amp;gt;. அண்மைக் காலத்தில் புலம்பெயர்தலின் விளைவாகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை பெத்லகேமில் மிகவும் குறைந்துவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;பெத்லகேம்&amp;#039;&amp;#039;&amp;#039; நகரின் எபிரேயப் பெயர் &amp;quot;Beit Leḥm&amp;quot; அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם‎) என்று வரும். அரபியில் அதன் பொருள் &amp;#039;&amp;#039;புலால் வீடு&amp;#039;&amp;#039; (House of Meat) என்றும் எபிரேயத்தில் &amp;#039;&amp;#039;அப்ப வீடு&amp;#039;&amp;#039; (House of Bread) என்றும் அமையும். இந்நகர் கிரேக்க மொழியில்  Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது. இது பெத்லகேம் ஆட்சிமண்டலத்தின் தலைநகர். [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]] மக்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் இந்நகர் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெத்லகேம் வரலாறு ==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[விவிலியம்|விவிலியத்தின்]] முதல் பகுதியாகிய [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] பெத்லகேம் &amp;#039;&amp;#039;தாவீதின் நகர்&amp;#039;&amp;#039; என்று அழைக்கப்படுகிறது. [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாடோ]] பெத்லகேம் நகரில் [[இயேசு|இயேசு கிறிஸ்து]] பிறந்தார் என்னும் செய்தியைத் தருகிறது (காண்க: [[மத்தேயு|மத்தேயு நற்செய்தி]], மற்றும் [[லூக்கா நற்செய்தி]]). கிறித்தவ சமூகங்களில் மிகப் பழமையான ஒரு குழுவினர் இந்நகரில் 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.பி. 529இல் சமாரியர்கள் பெத்லகேமைச் சூறையாடினார்கள். அதை பிசான்சிய மன்னர் முதலாம் ஜஸ்டின் மீண்டும் கட்டியெழுப்பினார். கி.பி. 637இல் [[உமர்|கலிபா உமர் இபன் அல்-கத்தாப்]] என்பவர் அதைக் கைப்பற்றினார். நகரிலிருந்த திருத்தலங்களுக்குச் செல்லும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டது. [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர் வீரர்கள்]] பெத்லகேமை 1099இல் பிடித்து கோட்டைச் சுவர்கள் எழுப்பினார்கள். மேலும், கிரேக்க வழிபாட்டு முறையை மாற்றி இலத்தீன் வழிபாட்டு முறை புகுத்தப்பட்டது. ஆனால் [[எகிப்து]]க்கும் [[சிரியா]]வுக்கும் அரசராக இருந்த [[சலாகுத்தீன்|சலாதீன்]] என்பவர் பெத்லகேமைக் கைப்பற்றி இலத்தீன் முறைக் குருக்களை வெளியேற்றினார். [[மம்லுக் வம்சம்|மம்லுக் குலத்தவர்]] 1250இல் பெத்லகேமின் சுவர்களைத் தகர்த்தெறிந்தனர். அவை [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமான் மன்னர்கள்]] காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[முதல் உலகப் போர்|முதல் உலகப்போரின்]] போது [[பிரித்தானியர்]] பெத்லகேம் நகரை [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமானியரிடமிருந்து]] பறித்தார்கள். [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன நாடு]] உருவாக்கப்படுவதற்கான [[ஐ.நா.]] திட்டத்தின்கீழ் 1947இல் பெத்லகேம் பன்னாட்டுத் தனிப்பகுதியாக மாறுவதாயிருந்தது. ஆனால் [[யோர்தான்]] நாடு 1948ஆம் ஆண்டு அரபு-இசுரயேல் போரின்போது பெத்லகேமை இணைத்துக்கொண்டது. 1967ஆம் ஆண்டு நிகழ்ந்த 6 நாள் போரில் [[இசுரயேல்]] நாடு பெத்லகேமைக் கைப்பற்றியது. 1995இலிருந்து பெத்லகேம் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]] தேசிய அதிகாரத்தின் கீழ் (Palestinian National Authority) நிர்வகிக்கப்பட்டு வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெத்லகேமில் வாழ்கின்ற மக்களுள் பெரும்பான்மையோர் [[இசுலாம்]] சமயத்தவர். [[கிறித்தவம்|கிறித்தவர்களும்]] கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.&lt;br /&gt;
[[படிமம்:Bethlehem-Manger-Square.jpg|thumb|right|உமர் மசூதி (1886). பெத்லகேம்.]]&lt;br /&gt;
[[படிமம்:55.Bethlehem.jpg|thumb|left|பெத்லகேமில் வாழ்ந்த கிறித்தவப் பெண்கள். ஆண்டு: 1911.]]&lt;br /&gt;
இங்கு சுற்றுலாப் பயணியரும் திருப்பயணியரும் பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். குறிப்பாக, [[இயேசு|கிறிஸ்து பிறப்பு விழாவின் போது]] கிறித்தவர் [[இயேசு]] பிறந்த இடத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள [[இயேசு பிறந்த இடக் கோவில்|இயேசு பிறப்புக் கோவிலை]] சந்திக்கவும் அங்கு இறைவேண்டல் செய்யவும் பெருந்திரளாகக் கூடுவர். பெத்லகேமின் வடக்கு நுழைவாயிலில் யூத இன மூதாட்டியும் யாக்கோபின் மனைவியுமான [[ராகேல்]] என்பவரின் கல்லறை உள்ளது. இது [[யூதர்]]களுக்குப் புனிதமான இடம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இயேசு பிறந்த இடக் கோவில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்படல் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
பெத்லகேமில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட &amp;quot;இயேசு பிறந்த இடக் கோவில்&amp;quot; (&amp;#039;&amp;#039;Church of the Nativity&amp;#039;&amp;#039;) இக்கோவில் ஓர் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று [[யுனெசுக்கோ]]வால் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
யுனெசுக்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது [[இயேசு]] பிறந்த இடக் கோவில் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று அறிவித்தது.&amp;lt;ref name=&amp;quot;இயேசு பிறந்த இடக் கோவில்&amp;quot;&amp;gt;[http://en.wikipedia.org/wiki/Church_of_the_Nativity இயேசு பிறந்த இடக் கோவில்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== விவிலியத்தில் பெத்லகேம் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Jesus birthplace in Bethlehem.jpg|thumb|right|பெத்லகேம் நகர். இயேசு கிறிஸ்து பிறந்த இடம் பளிங்குத் தரையில் வெள்ளியாலான ஒரு விண்மீன் வடிவில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.]]&lt;br /&gt;
பெத்லகேம் பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு. 1400இல் காணக்கிடைக்கிறது. [[அமர்னா நிருபங்கள்|அமர்னா களிமண் சுவடிகள்]] என்று அழைக்கப்படும் ஏடுகளில் &amp;quot;அபிரு&amp;quot; மக்கள் தொந்தரவு கொடுத்ததால் &amp;quot;பித்-லாஹ்மி&amp;quot; (&amp;quot;Bit-Lahmi&amp;quot;) என்னும் இடத்தைக் கைப்பற்றுவதற்கு [[எருசலேம்]] மன்னர் தம் மேல்நராக இருந்த [[எகிப்து]] மன்னரின் உதவியை நாடும் குறிப்பு உள்ளது. இங்கே &amp;quot;பித்-லாஹ்மி&amp;quot; என்பது பெத்லகேமைக் குறிப்பதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எப்ராத்தா&amp;quot; (Ephrath/Ephratah) என்று [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] வரும் பெயர் பெத்லகேமின் மறுபெயராகக் காணப்படுகிறது (காண்க: [[தொடக்க நூல்|தொடக்க நூல் 35:16, 19; 48:7]]). இங்குதான் யாக்கோபின் மனைவியும் யூத இன மூதாட்டியுமான [[ராகேல்]] என்பவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டார் (காண்க: [[தொடக்க நூல்|தொடக்க நூல் 48:7]]):&lt;br /&gt;
&lt;br /&gt;
{{cquote|ராகேல் கானான் நாட்டில் இறந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள். அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன். எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில் அவளை அடக்கம் செய்தேன் (தொநூ 48:7)}}&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்ராயிம் குலத்தவருக்கும் எப்ராத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருவேளை எப்ராயிம் குலத்தவரே பெத்லகேமை நிறுவியிருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிறித்தவர்கள் [[இயேசு கிறிஸ்து]] பெத்லகேமில் பிறந்தார் என்று ஏற்பர். அவர்கள் [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|இயேசுவின் பிறப்பு]] பெத்லகேமில் நிகழுமென்று [[இறைவாக்கினர்]] முன்னறிவித்தனர் என்று நம்புகின்றனர். [[மீக்கா (நூல்)|மீக்கா இறைவாக்கினரின்]] நூலில் &lt;br /&gt;
{{cquote|நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும் இஸ்ரயேலை ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும் (மீக்கா 5:2)}}&lt;br /&gt;
என்று வருகின்ற பகுதி [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|இயேசுவின் பிறப்பு]] பெத்லகேமில் நிகழ்ந்ததின் முன்னறிவிப்பு என்பது கிறித்தவர் கருத்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெத்லகேமில் பஞ்சம் ஏற்பட்டது என்றும், பெத்லகேமுக்கு அருகில் இருந்த பள்ளத்தாக்கில் [[ரூத்து (நூல்)]] வாற்கோதுமை அறுவடையாளர்களோடு சேர்ந்து வேலை செய்துவிட்டு, தம் மாமியாராகிய நகோமியோடு பெத்லகேம் சென்றார் என்றும் [[ரூத்து (நூல்)|ரூத்து நூல்]] கூறுகிறது(காண்க: [[ரூத்து (நூல்)|ரூத்து 1:1-5; 2:1-4]].&lt;br /&gt;
&lt;br /&gt;
[[தாவீது]] மன்னர் பிறந்த இடம் பெத்லகேம் என்பது மரபு. அங்குதான் அவர் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் (காண்க: [[1 சாமுவேல் (நூல்)|1 சாமுவேல் 16:4-13]]). தாவீது ஒளிந்திருந்த அதுல்லாம் குகை பெத்லகேமுக்கு அருகில் இருந்தது (காண்க: [[1 சாமுவேல் (நூல்)|1 சாமுவேல் 22:1]]).&lt;br /&gt;
&lt;br /&gt;
==இயேசு பிறந்த ஊர் ==&lt;br /&gt;
[[படிமம்:Bethlehem Christmas2.JPG|thumb|left|கிறிஸ்து பிறப்பு விழாவின்போது பெத்லகேமில் நிகழ்ந்த திருப்பவனி. ஆண்டு 2006.]]&lt;br /&gt;
&lt;br /&gt;
இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று [[மத்தேயு]] மற்றும் [[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]] ஆகிய இரு நற்செய்தியாளர்கள் பதிவுசெய்துள்ளனர். [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திப்படி இயேசுவின் பெற்றோராகிய [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவும்]] [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] நாசரேத்து என்னும் ஊரில் வாழ்ந்துவந்தனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது (இன்றைய கணிப்புப்படி, கி.பி. 6ஆம் ஆண்டு) தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] தம் மனைவி [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவோடு]] பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அங்கேதான் மரியா ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்து அவருக்கு [[இயேசு]] என்று பெயரிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[மத்தேயு]] நற்செய்திப்படி, &amp;quot;ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்&amp;quot; ([[மத்தேயு|மத்தேயு 2:1]]). தன்னுடைய ஆட்சிக்கு உலைவைக்க ஒருவர் பிறந்துவிட்டாரோ என்று அஞ்சிய ஏரோது குழந்தை [[இயேசு]]வைக் கொல்ல முயற்சி செய்தான். &amp;quot;ஏரோது பெத்லகேமிலுமமதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்ககு உட்பட்டவையுமான எல்லா ஆண்குழந்தைகளையும் கொன்றான்&amp;quot; ([[மத்தேயு|மத்தேயு 2:16]]). குழந்தையின் உயிருக்கு இடர்ப்பாடு ஏற்படலாம் என்றும் அதனால் யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பியோட வேண்டும் என்றும் கனவில் எச்சரிக்கப்பட்டார். பின்னர் திருக்குடும்பம் நாசரேத்தில் குடியேறியது (காண்க:([[மத்தேயு|மத்தேயு 2:19-23]]). [[இயேசு]] உண்மையிலேயே பெத்லகேமில்தான் பிறந்தாரா என்பதை நிறுவ போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பெரும்பான்மையான விவிலிய அறிஞர்கள் பெத்லகேமே [[இயேசு]]வின் பிறப்பிடம் என்று நிறுவியுள்ளனர். இதற்கான சான்றுகள் [[மத்தேயு]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகள் தவிர, வேறு பல பழங்காலக் கிறித்தவ எழுத்தாளர்களின் கூற்றுக்களிலிருந்தும் தெரிகின்றன.&lt;br /&gt;
=== இயேசு பிறந்த இடக் கோவில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்படல் ===&lt;br /&gt;
பெத்லகேமில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட &amp;quot;இயேசு பிறந்த இடக் கோவில்&amp;quot; (&amp;#039;&amp;#039;Church of the Nativity&amp;#039;&amp;#039;) இக்கோவில் ஓர் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று [[யுனெசுக்கோ]]வால் அறிவிக்கப்பட்டுள்ளது. யுனெசுக்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது [[இயேசு]] பிறந்த இடக் கோவில் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று அறிவித்தது.&amp;lt;ref name=&amp;quot;இயேசு பிறந்த இடக் கோவில்&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== தமிழ் இலக்கியத்தில் பெத்லகேம் ==&lt;br /&gt;
[[வேதநாயகம் சாஸ்திரியார்]] என்னும் தமிழ்க் கிறித்தவப் புலவர் (1774-1864) &amp;#039;&amp;#039;&amp;#039;பெத்லகேம் குறவஞ்சி&amp;#039;&amp;#039;&amp;#039; என்னும் சிற்றிலக்கியம் படைத்தார். இக்குறவஞ்சி இலக்கியம் நாடகப் பாங்கான கதை அமைப்புடையது. இதை இயற்றிய சாஸ்திரியார் தஞ்சை சரபோஜி மன்னரின் அவைப் புலவராக இருந்தார்.&lt;br /&gt;
பெத்லகேம் குறவஞ்சியில் &amp;#039;&amp;#039;இறைவாழ்த்து&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;இயேசுவின் உலா&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;தேவமோகினி காதல்&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;குறத்தி கூறல்&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;சிங்கன் வருகை&amp;#039;&amp;#039; என்று 5 பகுதிகள் உள்ளன. இதன் கதையமைப்பு பின்வருமாறு:&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் கட்டியங்காரனாக திருமுழுக்கு யோவான் வருகிறார். அவரே [[இயேசு]] உலா வரப்போகிறார் என்னும் செய்தியை அறிவிக்கிறார்; [[இயேசு]]வின் பெருமைகளை எடுத்தோதுகிறார். உலா வரும் இயேசுவை வரவேற்க எருசலேம் நகரே விழாக் கோலம் பூணுகிறது. நகர மாந்தர்களும் வானதூதர்களும் திருச்சபை மகளிரும் திரளாகக் கூடிவருகின்றனர். இயேசு மாட்சிமையோடு உலா வருகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலா வரும் [[இயேசு]]வைப் பார்க்கும் அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர். மக்கள் இலைக் கொத்துகளை அசைத்து &amp;quot;ஓசன்னா&amp;quot; என்று கூறி ஆர்ப்பரிக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீயோன் மகள் என்னும் தேவ மோகினி (திருச்சபையின் உருவகம்) இயேசுவைக் கண்டதும் காதல் கொள்கிறாள். அழகும் இறைபக்தியும் கருணையும் நிறைந்த அப்பெண் படுகின்ற இன்ப வேதனையை சாஸ்திரியார் சிறப்புற விவரிக்கின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலா வந்த [[இயேசு]]வைக் கண்டதும் நெஞ்சைப் பறிகொடுத்தத சீயோன் மகள் ([[திருச்சபை]]) அவரை நினைத்து ஏங்கித் தவிக்கின்றாள். இவ்வேளையில் (விசுவாச) குறத்தி (சிங்கி) வருகிறாள். இடுப்பில் கூடையும் சிங்கார நடையுமாக வந்த குறத்தியை அழைத்து, தலைவி குறிசொல்லக் கேட்கின்றாள். குறத்தியும் தன் நாட்டு வளத்தையும் நகர வளத்தையும் மலை வளத்தையும் எடுத்துக் கூறும் போது [[விவிலியம்|விவிலியச்]] செய்திகளையும், இயேசுவின் பெருமையையும் அவர் புரிந்த அருஞ்செயல்களையும் [[கிறித்தவம்|கிறித்தவரின்]] மேன்மைகளையும் கூடவே இணைத்துக் கூறுகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இயேசுவின் வியத்தகு பெருமைகளைக் குறத்தி கூறக் கேட்ட தலைவியை நாணம் மேற்கொள்ளவே அவள் முகம் சிவந்து விழி தாழ்க்கின்றாள். தலைவியின் கையைப் பார்த்துக் குறிசொல்லும் குறத்தி &amp;quot;பெத்லகேம் நாதர் (பெத்தலை நாதர் = இயேசு) உன்னை மணம் கொள்ள நாளை வருவார்; சேலை வரும்; மாலை வரும்; சிலுவை முத்திரை மோதிரமும் வரும்&amp;quot; என்று குறி கூறுகிறாள். தலைவியும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகின்றாள். நன்றிநிறை உள்ளத்தோடு சிங்கிக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளிக்கின்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைத் தொடர்ந்து (ஞான) சிங்கன் பெத்லகேம் நாதராம் இயேசுவைப் பாடிக்கொண்டே வருகின்றான். அந்த இயேசுவிடம் ஒரு &amp;quot;ஞான வலை&amp;quot; இருக்கிறது என்றும், ஆசையெனும் வலையில் சிக்கித்தவிக்கும் மனிதரை மீட்டெடுப்பது அந்த ஞான வலையே என்றும் பாடுகின்றான். பின் அவன் சிங்கியைச் சந்திக்கின்றான். &amp;quot;இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல் எங்கே நீ சென்றனை சிங்கி?&amp;quot; என்று அவன் கேட்க, சிங்கி பதிலாக, &amp;quot;பெத்தலேகம் நகர் சீயோன் குமாரிக்குப் பத்திக்குறி சொலச் சிங்கா&amp;quot; என்று கூறுகின்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கதைத் தலைவியாம் சீயோன் மகளிடமிருந்து பெற்ற அணிகளையெல்லாம் சிங்காரமாக உடலில் சாத்தியிருந்த குறத்தியிடம் சிங்கன் அவை எங்கிருந்து வந்தனவென்று வினவுகிறான். அதற்குச் சிங்கியும் நயமாகப் பதிலளிக்கின்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் சிங்கனும் சிங்கியும் கடவுளைப் போற்றுகின்றனர். இறுதி வாழ்த்தோடு &amp;#039;&amp;#039;பெத்லகேம் குறவஞ்சி&amp;#039;&amp;#039; நிறைவு பெறுகிறது.&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/courses/diploma/a071/a0714/html/a07143l2.htm வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய &amp;#039;&amp;#039;பெத்லகேம் குறவஞ்சி&amp;#039;&amp;#039;]&amp;lt;/ref&amp;gt;. இக்குறவஞ்சி வழியாக வேதநாயகம் சாஸ்திரியார் கிறித்தவ சமயக் கருத்துக்களை இலக்கிய நயத்தோடும், மக்கள் பண்பாட்டோடு இயைந்த விதத்திலும் எடுத்துக் கூறியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலும் காண்க ==&lt;br /&gt;
* [[இயேசு பிறந்த இடக் கோவில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
{{விவிலிய இடங்கள்}}&lt;br /&gt;
{{New Testament places associated with Jesus}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:விவிலிய இடங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பாலஸ்தீன நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Sumathy1959</name></author>
	</entry>
</feed>