<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>பளியர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T11:52:20Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=428515&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Gowtham Sampath: *உரை திருத்தம்*</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=428515&amp;oldid=prev"/>
		<updated>2025-06-27T06:52:36Z</updated>

		<summary type="html">&lt;p&gt;*உரை திருத்தம்*&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:Paliyan women.jpg|thumb|பளியர் பெண்ணும் குழந்தைகளும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;பளியர்&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;&amp;#039;பழையர்&amp;#039;&amp;#039;&amp;#039; மற்றும் &amp;#039;&amp;#039;&amp;#039;பழையரேர்&amp;#039;&amp;#039;&amp;#039; என்றும் அழைக்கப்படுகின்றனர்) (&amp;#039;&amp;#039;Paliyan, Palaiyar, Pazhaiyarare&amp;#039;&amp;#039;) எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில், குறிப்பாக [[தமிழ்நாடு]] மற்றும் [[கேரளம்|கேரளத்தின்]], [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்னக காடுகளில்]] உயர்ந்தப் பகுதிகளில் வாழும் [[பழங்குடி]]யினராவர்.  தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமூகங்களில் பளியர் சமூகமும் ஒன்று.  இவர்கள் [[தமிழ்]] மொழியைப் பேசுகிறார்கள்.  இவர்கள் பொதுவாக வேட்டைக்காரர்களாகவும், தேன் சேகரிப்பவர்களாகவும் உள்ளனர். சேனைக் கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு இவர்களது முதன்மை உணவாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர்கள் அரைகுறை ஆடை அணிந்திருந்தும் குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்ந்திருந்தனர். தற்காலத்தில் இவர்கள் சமவெளி மக்களைப் போலவே மாறி வனப்பொருட்களை விற்றும் விவசாயம் செய்தும் தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருகின்றனர். மலைப்புறத் தோட்டங்களில் தொழிலாளர்களாகவும் சிலர் பணி புரிகின்றனர். மேலும் இவர்கள் மலை கோயில்களில் பூசை செய்தும், கோயில் சுற்றுபுறத்தை தூய்மை செய்தும் வருகின்றனர்.  இவர்களுக்கு அரசு திட்டத்தின் முலம் வீட்டுமனை மற்றும் ஆரம்பக் கல்வி கூடங்களும் அமைத்து தரப்பட்டுள்ளன.&amp;lt;ref&amp;gt;Thurston, E. 1909. Castes and Tribes of South India. Vol IV. Government press, Madras&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;Dahmen, Rev. F. 1908 The Paliyans, a hill-tribe of the Palni Hills (south India), Anthropos 3: 19-31&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;Gardner, P. M. 1972. The Paliyans. In: Bicchieri, M. (ed.,). Hunters and Gatherers Today.  New York:  Holt, Rinehart and Winston. pp. 404-447&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திண்டுக்கல் மாவட்டம்]] [[பழனி]] மேற்கு மலையின் சரிவிலும், தொடர்ந்து, [[தேனி மாவட்டம்]], [[வருசநாடு]] மலைப்பகுதிகளிலும் இவ்வினத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர், மலைவாழ் இனங்களில் மிகப் பழங்குடியினர் இவர்களே. இவர்களில் காட்டுப்பளியர், புதைப்பளியர் என்னும் இரு பிரிவினர் உள்ளனர். தேனடைகளை எடுக்கப் பயங்கரமான பாறைகளிலும் ஏறக் கூடிய திறனுடையவர்கள். விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவர். இவர்கள் காய், கனி, [[தேன்]], தானியங்களை உண்பது வழக்கம். மரங்களின் மீது பரண்களை அமைத்தும், பாறை இடுக்குகளிலும், குகைகளிலும் குடியிருப்பைக் கொண்டிருக்கிறார்கள். குட்டையான உருவம், சுருண்ட முடி, தடித்த உதடு, கருப்பு நிறம், குறைந்த ஆடை இவைகளைக் கொண்டு பளியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த இன மக்கள் [[செம்மார்புக் குக்குறுவான்|குக்குருவான்]] பறவையை &amp;#039;&amp;#039;திட்டுவான் குருவி&amp;#039;&amp;#039; என்று அழைக்கிறார்கள்.&amp;lt;ref&amp;gt;[http://tamil.thehindu.com/opinion/reporter-page/இலங்கையிலிருந்து-மதுரைக்கு-வலசை-வரும்-வண்ணத்துப்-பூச்சிகள்-சூழலியல்-பேரவையின்-ஆய்வில்-தகவல்/article7607073.ece| இலங்கையிலிருந்து மதுரைக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகள்: சூழலியல் பேரவையின் ஆய்வில் தகவல்]தி இந்து தமிழ் பார்த்த நாள் 02. செப்டம்பர் 2015&amp;lt;/ref&amp;gt;﻿ &lt;br /&gt;
&lt;br /&gt;
== இசை ==&lt;br /&gt;
இந்த மக்களின் ஒரே பொழுதுபோக்கு இசை மட்டுமே. புல்லாங்குழல், சத்தக்குழல், கொம்பு, மேளம், மத்தளம், தப்பு, தமுக்கு உள்ளிட்ட பழமையான இசைக்கருவிகளும் அவை சார்ந்த ஆதி இசையும் இன்றளவும் இவர்களிடம் உயிர்ப்போடு உள்ளன. இந்த இசைக்கருவிகளை இவர்களே உருவாக்கி இசைக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வழிபாடு ==&lt;br /&gt;
மலைவனம் முழுவதும் வனதேவாதிகள் (தெய்வங்கள்) நிறைந்திருக்கின்றன என்று இவர்கள் நம்புகிறார்கள். மேலும் இசையால், வனதேவாதிகளை தங்களின் வாழ்விடத்துக்கே வரவைத்துப் பேசமுடியும் என்றும் நம்புகின்றனர். எழுகரை நாடன், பளிச்சியம்மன் இந்த தெய்வங்களே இவர்களின் முதன்மைத் தேவாதிகள். இந்த தேவாதிகள்  உள்ளிட்ட 12 வனதேவாதிகள் உள்ளது என்கின்றனர்.  இவர்களின்  தெய்வ வழிபாட்டில் இசை முதன்மை ஆனதாக உள்ளது. தெய்வ வழிபாட்டின் போது ஒவ்வொரு விதமான இசை வாசிக்கப்படும். அப்போது, ஆணோ, பெண்ணோ யாராவது ஒருவர் தானாக முன்வந்து ஆடுகிறார். தெய்வங்கள் தங்களுக்குப் பிடித்த இசையை கேட்கும்போது, யாராவது ஒருவருக்குள் வந்திறங்குவதாக இவர்கள் நம்புகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வனதேவாதிகளை வரவழைக்க அந்த தேவாதிகளுக்குப் பிடித்த குழலை மட்டும்தான் இசைக்கவேண்டும் என்று நம்புகின்றனர். குழல் வாசித்து வனதேவாதிகளை வரவழைப்பதை இவர்கள் &amp;#039;&amp;#039;வெறியாட்டு&amp;#039;&amp;#039; என்று அழைக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வெறியாட்டு|வெறியாட்டின்போது]] ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொருவிதமாக குழல் வாசிக்கின்றனர். அந்தக் குழலிசையைக் கேட்டு எங்கயிருந்தாலும் அந்த தெய்வங்கள் மயங்கி வரும் என்றும், ஒவ்வொரு தேவாதிக்கும் ஒரு ஆட்டம் உள்ளது. அருள் வந்து ஆடுகிறவர்கள் அந்தந்த தேவாதிக்கான ஆட்டத்தைத்தான் ஆடுவார்கள். அதைக்கொண்டே எந்த தேவாதி வந்திருக்கிறது என்பதை &lt;br /&gt;
அறிகின்றனர்.&amp;lt;ref&amp;gt;{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article19544290.ece | title=ஆதி இசையில் அசத்தும் பளியர்கள்! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=23 ஆகத்து 2017 | accessdate=24 ஆகத்து 2017 | author=ஒய். ஆண்டனி செல்வராஜ்}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கேரளப் பழங்குடியினர்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பளியர்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்தியப் பழங்குடிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழகப் பழங்குடிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Gowtham Sampath</name></author>
	</entry>
</feed>