<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF</id>
	<title>பல்லவி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-02T13:56:33Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF&amp;diff=428375&amp;oldid=prev</id>
		<title>01:31, 5 பெப்பிரவரி 2026 இல் imported&gt;Alangar Manickam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF&amp;diff=428375&amp;oldid=prev"/>
		<updated>2026-02-05T01:31:02Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[கருநாடக இசை]]யில் பயின்று வரும் [[உருப்படி]]கள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் &amp;#039;&amp;#039;&amp;#039;பல்லவி&amp;#039;&amp;#039;&amp;#039; என்பதும் ஒன்று. [[அனுபல்லவி]], [[சரணம்]] என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான [[கீர்த்தனை]], [[கிருதி]], [[பதம் (இசை, நாட்டியம்)|பதம்]], [[சுரசதி]], [[சதிசுரம்]], [[வண்ணம் (இசை)|வண்ணம்]] முதலிய இசைப் பாடல்களில் இவ்வுறுப்பு காணப்படுகிறது. &amp;lt;ref&amp;gt;மம்மது, நா., 2010. பக். 362.&amp;lt;/ref&amp;gt; கருநாடக இசை உருப்படிகளில் மட்டுமின்றித் தற்காலத்தில் மெல்லிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப் பாடல்கள் போன்றவற்றிலும் பல்லவி என்னும் உறுப்பு உள்ளது. பொதுவாக மேற்குறிப்பிட்ட உருப்படிகளில் பல்லவி முதல் உறுப்பாக வரும். இதனாலேயே தமிழில் இதை &amp;#039;&amp;#039;&amp;#039;எடுப்பு&amp;#039;&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;&amp;#039;முதல்நிலை&amp;#039;&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;&amp;#039;முகம்&amp;#039;&amp;#039;&amp;#039; ஆகிய சொற்களால் குறிப்பிடுவர்.&amp;lt;ref&amp;gt;மம்மது, நா., 2010. பக். 362.&amp;lt;/ref&amp;gt; இந்துஸ்தானி இசையில் இதை &amp;#039;&amp;#039;&amp;#039;ஸ்தாயி&amp;#039;&amp;#039;&amp;#039; என்பர். &amp;lt;ref&amp;gt; வில்லவராயர், மீரா., 2011, பக். 46&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
ஓர் இசைக்கலைஞரின் கற்பனையை பல்லவி தெளிவுபடுத்தும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பல்லவி பாடல்களில் முதல் உறுப்பாக வரும் அதேவேளை, அனுபல்லவி, சரணம் ஆகிய உறுப்புக்களுக்குப் பின்னரும் திரும்பத் திரும்பப் பாடப்படுவது உண்டு. பல்லவி பொதுவாக ஒரு [[தாளம்|தாள]] வட்டணை (ஆவர்த்தம்) நீளம் கொண்டதாக இருக்கும். இரண்டு அல்லது நான்கு தாள வட்டணைகளைக் கொண்டு அமைவதும் உண்டு. [[பக்கவாத்தியம்]] வாசிப்பவர்கள், எடுத்துக்கொண்ட தாளத்தின் தன்மையை அறிந்துகொள்ள இது உதவியாக உள்ளது. பாடும்போது, பல்லவியை இரண்டு தடவைகள் அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் பாடுவதும் உண்டு. &lt;br /&gt;
&lt;br /&gt;
==எடுத்துக்காட்டு==&lt;br /&gt;
[[அலைபாயுதே கண்ணா (பாடல்)|அலைபாயுதே ...]] என்று தொடங்கும் கீர்த்தனையில் முதல் இரண்டு வரிகள் பல்லவி ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;பல்லவி&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;ஆனந்த மோகன வேணுகானமதில்&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;அனுபல்லவி&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;நிலைபெயராது சிலைபோலவே நின்று&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா - என் மனம்&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;சரணம்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;கனித்த/ (கதித்த) மனத்தில் இருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்(கு) அளித்தவா&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
: &amp;#039;&amp;#039;குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு&amp;#039;&amp;#039; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இதையும் காண்க==&lt;br /&gt;
[[இராகம் தானம் பல்லவி]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==உசாத்துணைகள்==&lt;br /&gt;
* மம்மது, நா., &amp;#039;&amp;#039;தமிழிசைப் பேரகராதி&amp;#039;&amp;#039;, இன்னிசை அறக்கட்டளை, மதுரை, 2010.&lt;br /&gt;
* வில்லவராயர், மீரா., &amp;#039;&amp;#039;ஹிந்துஸ்தானி மேற்கத்திய இசை - ஓர் அறிமுகம்&amp;#039;&amp;#039;, லங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம், 2011 (மூன்றாம் பதிப்பு).&lt;br /&gt;
* செல்லத்துரை, பி. டி., &amp;#039;&amp;#039;தென்னக இசையியல்&amp;#039;&amp;#039;, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 2005 (ஐந்தாம் பதிப்பு).&lt;br /&gt;
* பக்கிரிசாமிபாரதி, கே. ஏ., &amp;#039;&amp;#039;இந்திய இசைக்கருவூலம்&amp;#039;&amp;#039;, குசேலர் பதிப்பகம், சென்னை, 2006.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கருநாடக இசை]]&lt;br /&gt;
{{வார்ப்புரு:இசை}}&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Alangar Manickam</name></author>
	</entry>
</feed>