<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>செயநகரன் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-05T02:05:36Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=370100&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Ksmuthukrishnan: /* உசாத்துணைகள் */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=370100&amp;oldid=prev"/>
		<updated>2025-02-24T04:56:26Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;உசாத்துணைகள்&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox monarch&lt;br /&gt;
| name        = செயநாகரன்&lt;br /&gt;
| title           =[[மயபாகித் பேரரசு|மயபாகித்]] பேரரசன்&lt;br /&gt;
| image           =&lt;br /&gt;
| caption         =&lt;br /&gt;
| reign           =[[மயபாகித் பேரரசு]]: 1309–1328&lt;br /&gt;
| coronation      =&lt;br /&gt;
| full name       = ஸ்ரீ மகாராஜ வீராண்டகோபால ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவ ஆதீசுவரன்&lt;br /&gt;
| predecessor     =[[ராடென் விஜயன்]]&lt;br /&gt;
| successor       =[[திரிபுவன விஜயதுங்கதேவி]]&lt;br /&gt;
| spouse          =&lt;br /&gt;
| issue           =&lt;br /&gt;
| royal house     =&lt;br /&gt;
| dynasty         = இராயச வம்சம்&lt;br /&gt;
| father          =&lt;br /&gt;
| mother          =&lt;br /&gt;
| birth_date   =&lt;br /&gt;
| birth_place  =&lt;br /&gt;
| death_date   =1328&lt;br /&gt;
| death_place  = &lt;br /&gt;
| date of burial  =&lt;br /&gt;
| place of burial =&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;செயநகரன்&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது  &amp;#039;&amp;#039;&amp;#039;ஸ்ரீ மகாராஜ வீராண்டகோபால ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவ ஆதீசுவரன்&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவதீசுவர விக்ரமோத்துங்கதேவன்&amp;#039;&amp;#039;&amp;#039;, அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;காலா கெமெத்&amp;#039;&amp;#039;&amp;#039; என்றெல்லாம் அறியப்பட்டவன், 1295இல் [[கெதிரி அரசு|கெதிரி]]யின் மன்னனாகவும் 1309 - 1328 வரை [[மயபாகித் பேரரசு|மயபாகித்]] பேரரசின் அரசனாகவும் விளங்கிய மன்னன் ஆவான்.&amp;lt;ref name=Coedes&amp;gt;{{Cite book&lt;br /&gt;
  | last =   Cœdès&lt;br /&gt;
  | first = George&lt;br /&gt;
  | authorlink = Georges Coedès&lt;br /&gt;
  | title = The Indianized states of Southeast Asia&lt;br /&gt;
  | publisher = University of Hawaii Press&lt;br /&gt;
  | year = 1968&lt;br /&gt;
  | url = http://books.google.com.my/books?id=iDyJBFTdiwoC&lt;br /&gt;
  | isbn =9780824803681 }}&amp;lt;/ref&amp;gt;{{rp|201,233}} [[ராடென் விஜயன்|ராடென் விஜயனின்]] மகனான செயநகரனின் வரலாற்றை, பரராத்தன், நகரகிரேதாகமம் முதலான சாவக நூல்கள் சொல்கின்றன. இவனது ஆட்சியின் போதே &amp;#039;&amp;#039;[[கயா மடா|கஜா மடா]]&amp;#039;&amp;#039; (ஆனைத் தளபதி) என்பவன் அப்பேரரசில் முக்கியத்துவமடையத் தொடங்கினான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வாழ்க்கை==&lt;br /&gt;
[[ராடென் விஜயன்|ராடென் விஜயனின்]] ஐந்து மனைவியரில், செயநகரன், மூத்தவளான திரிபுவனேசுவரியின் மகன் என்றும், [[தாரா பிதாக்|இந்திரேசுவரியின்]] மகன் என்றும் வேறுபட்ட மரபுரைகள் சொல்கின்றன. இந்திரேசுவரியின் மகனான செயநகரன், குழந்தைகள் அற்ற திரிபுவனேசுவரியின் மகனாக, பட்டத்து இளவரசனாக வளர்ந்தான் என்பதே தகும். விஜயனின் ஆட்சியின் பிற்காலத்தில் ஏற்பட்ட கடுமையான கிளர்ச்சிகள், மயபாகித் பேரரசை ஆட்டம் காண வைத்தன. 1319இல் &amp;#039;குதி&amp;#039; என்பவன் தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியொன்றில், அரண்மனையும், நகரும் கிளர்ச்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டபோது, [[கயா மடா]], மற்றும் தன் காவலனின் உதவியுடன் அங்கிருந்து தப்பினான் செயநகரன்.&amp;lt;ref name=Coedes/&amp;gt;{{rp|233}} குதிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்பதையுணர்ந்த கயா மடா, அவனது கிளர்ச்சியை அடக்கியொழித்து நகரை மீட்டபோதே, செயநகரன் மீண்டும் நகர் திரும்ப முடிந்தது. 1325 முதல் 1328 வரை சீனாவுடன் செயநகரன் வாணிபத் தொடர்புகளைப் பேணியமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.&amp;lt;ref name=Coedes/&amp;gt;{{rp|234}}&lt;br /&gt;
&lt;br /&gt;
பேரழகனாக இருந்தபோதும், செயநகரனின் பெண்பித்து அவனுக்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்திக் கொடுத்தது.  அரசவை ஊழியர் பலரது மனைவியருடனும் மகள்மாருடனும் அடிக்கடி அத்துமீறி நடந்துகொண்ட செயநகரன், அவனது காம விளையாட்டுக்களைக் குறிக்கும் வகையில், &amp;quot;காலா கெமெத்&amp;quot; எனும் பெயராலேயே அழைக்கப்பட்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Bajang Ratu Gate Trowulan.jpg|175px|thumb| செயநகரன் பள்ளிப்படை அமைந்துள்ள &amp;quot;துரோலுவான்&amp;quot; மாளிகையில், அவனை நினைவுகூரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள, &amp;quot;பயாங் ரது&amp;quot; வாயில்]]&lt;br /&gt;
==படுகொலை==&lt;br /&gt;
1328இல், அறுவைச் சிகிச்சை ஒன்றின் போது, தன் வைத்தியர் தங்கன் என்பவரால், திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டான் செயநகரன். தீவிர விசாரணைக்குப் பின், தங்கன் [[கயா மடா|கயா மெடனால்]] கொல்லப்பட்டதாக ஒரு கதையும், கயா மெடனின் திட்டப்படியே செயநகரன் கொல்லப்பட்டதாக இன்னொரு கதையும் சொல்லப்படுகின்றது. தன் மனைவியைக் காமக்கிழத்தியாக்கிய கோபத்தில், அரசவைப் பிரமுகர் ஒருவரே இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.&amp;lt;ref name=Coedes/&amp;gt;{{rp|234}} எவ்வாறெனினும் செயநகரனின் கொலை, மர்மமாகவே இருந்து வருகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவன் மறைவுக்குப் பின் அரசாட்சிக்குப் பொறுப்பாக இருந்த [[காயத்திரி ராஜபத்தினி|இராசமாதா காயத்திரி]], தான் பௌத்த துறவறத்தை ஏற்றிருந்ததால், அரசோச்ச மறுத்தாள். பின் அவளாணைப்படி, அவள் மகள் [[திரிபுவன விஜயதுங்கதேவி]], மயபாகித்தின் அரசியாக முடிசூடிக் கொண்டாள். 1330களில், சிங்கசாரியின் இளவரசனாக விளங்கிய கர்த்தவர்த்தனன் அல்லது சக்கரதாரன் என்பவனை மணந்துகொண்ட துங்கதேவி,  1334இல் [[ஹயாம் வுரூக்]]கைப் பெற்றெடுத்ததுடன், 1350இல் அவனிடம் ஆட்சியைக் கையளித்து, அரசியலிலிருந்து விலகிக் கொண்டாள்.&amp;lt;ref name=Coedes/&amp;gt;{{rp|234}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்புகள்==&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==உசாத்துணைகள்==&lt;br /&gt;
* [[Slamet Muljana]]. 2005. &amp;#039;&amp;#039;Menuju Puncak Kemegahan&amp;#039;&amp;#039;. Jakarta: LKIS&lt;br /&gt;
* Slamet Muljana. 1979. &amp;#039;&amp;#039;Nagarakretagama dan Tafsir sejarahnya&amp;#039;&amp;#039;. Jakarta: Bhratara&lt;br /&gt;
&lt;br /&gt;
{{s-start}}&lt;br /&gt;
{{succession box |&lt;br /&gt;
  before=[[ராதன் விஜயன்]] |&lt;br /&gt;
  title=[[மயபாகித் பேரரசு]] |&lt;br /&gt;
  years=1309–1328 |&lt;br /&gt;
  after=[[திரிபுவன விஜயதுங்கதேவி]]&lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{s-end}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சிங்காசாரி]]&lt;br /&gt;
[[பகுப்பு:1328 இறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயாபாகித்து அரசர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Ksmuthukrishnan</name></author>
	</entry>
</feed>