<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>சனமேசயன் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T16:59:22Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=350215&amp;oldid=prev</id>
		<title>imported&gt;எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: /* மேற்கோள் */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=350215&amp;oldid=prev"/>
		<updated>2025-10-13T04:04:36Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;மேற்கோள்&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[Image:00005 Janamejaya and brothers.jpg|right|thumb|300px|சர்ப்ப வேள்வியில் சனமேசயனும் தம்பியரும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
பேரரசன் &amp;#039;&amp;#039;&amp;#039;ஜனமேஜயன்&amp;#039;&amp;#039;&amp;#039;  ([[சமஸ்கிருதம்]]: जनमेजय) [[இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பரீட்சித்து]] மன்னனின் மகனும், [[அபிமன்யு]]வின் பேரனும், [[அருச்சுனன்|அருச்சுனனின்]] கொள்ளுப்பேரனும் ஆவான். &lt;br /&gt;
&lt;br /&gt;
குரு வம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை.&amp;lt;ref&amp;gt;http://www.jeyamohan.in/43847#.VWydec-qqkp&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வியாசர்|வியாச]] முனிவரின் மாணவனான [[வைசம்பாயனர்|வைசம்பாயனரால்]] [[மகாபாரதம்|மகாபாரத]] [[இதிகாசம்]] பரிசித்துவிற்குச் சொல்லப்படும் போது, அங்கிருந்த சூத முனிவரான [[உக்கிரசிரவஸ்|உக்கிரசிரவசும்]] கேட்டார். பின்னர் உக்கிரசிரவஸ், [[நைமிசாரண்யம்|நைமிசாரண்யத்தில்]] உள்ள [[சௌனகர்|சௌனகாதி முனிவர்களுக்கு]] மகாபாரத இதிகாசத்தை எடுத்துக் கூறினார். இவனுக்கு [[ஆதிசிம கிருஷ்ணன்]] என்ற மகனும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மகாபாரதம்==&lt;br /&gt;
மகாபாரதத்தில், ஜனமேசயனுக்கு ஆறு தம்பியர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், காக்சசேனன், உக்கிரசேனன், சித்திரசேனன், இந்திரசேனன், சுசேனன், நாக்கியசேனன் என்போராவர் என்று ஆங்கில விக்கியில் மேற்கோளுடன்&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;Journal of the Department of Letters&amp;#039;&amp;#039; by University of Calcutta (Dept. of Letters),Publ.Calcutta University Press, 1923, p2&amp;lt;/ref&amp;gt; இருக்கிறது. மகாபாரதத்தின் ஆதிபர்வம் 3ம் பகுதியில் சுரூதசேனா, உக்ரசேனா, பீமசேனா ஆகியோர் அவனுடன் பிறந்த மூன்று தம்பிகளாவர் என்ற குறிப்பே இருக்கிறது.&amp;lt;ref&amp;gt;[http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section3a.html &amp;quot;தமிழ் மஹாபாரதம்&amp;quot;]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[http://www.sacred-texts.com/hin/m01/m01004.htm &amp;quot;Mahabharata Adiparva section 3 of Kisari Mohan Ganguli in english&amp;quot;]&amp;lt;/ref&amp;gt; மகாபாரதத்தின் தொடக்கப் பகுதிகளில் சனமேசயனின் வாழ்க்கை தொடர்பான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தக்சசீலத்தைக் கைப்பற்றியதும், [[தட்சகன்]] என்னும் பாம்பரசனுடனான சண்டையும் அடங்குகின்றன. இவனது தந்தையான பரீட்சித்துவின் இறப்புக்குத் தக்சகன் காரணமாக இருந்ததால், அவன் நாக இனத்தையே அழிப்பதில் குறியாக இருந்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் [[உத்தங்கர்]] தூண்டுதல் காரணமாகவும் &amp;#039;&amp;#039;சர்ப்ப சத்ரா வேள்வி&amp;#039;&amp;#039;யை நடத்த ஏற்பாடுகள் செய்கிறான். நாக அரசன் [[தட்சகன்]] நாக வேள்வியில் விழுந்து இறக்கும் தருவாயில், நாககன்னி [[ஜரத்காரு|ஜரத்காருவுக்குப்]] பிறந்த [[ஆஸ்திகர்]] அவனது வெறித்தனமான பாம்புகள் அழிப்பை தடுக்கிறார். அப்போது அங்கு வரும் [[வேதவியாசர்]], ஒரு சாபத்தினை நிறைவேற்றவேண்டி ஒருவர் இயற்றிய செயலுக்காக, அந்த இனத்தவரையே அழிப்பது அறமாகாது என்றும் [[பாண்டவர்]] வழித்தோன்றலுக்கு இது அழகல்ல எனவும் எடுத்துச் சொல்ல, நாக வேள்வியை கைவிடுகிறான். தனது முன்தாதையர்கள் பற்றி அறிய விரும்பிய சனமேசயனுக்கு, வியாசர் தனது சீடர் [[வைசம்பாயனர்|வைசம்பாயனரிடம்]] மகாபாரதக்கதையை அதே வேள்வி நடந்த இடத்தில் சொல்லப்பணிக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்==&lt;br /&gt;
{{refs}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மகாபாரதம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:குரு வம்சம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி</name></author>
	</entry>
</feed>