<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88</id>
	<title>குலவை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-02T06:09:28Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88&amp;diff=335682&amp;oldid=prev</id>
		<title>15:10, 29 மே 2023 இல் imported&gt;Arularasan. G</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88&amp;diff=335682&amp;oldid=prev"/>
		<updated>2023-05-29T15:10:07Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:குலவை.svg|thumb|பொங்கல் விழாவில் குலவையிடும் பெண்கள்]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;குலவை&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது [[தமிழர்]]கள் எழுப்பும் மங்கல ஒலி ஆகும். இது பெரும்பாலும் பெண்களால் எழுப்பப்படும். கைகளை வாயருகே வைத்த நிலையில் உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைப்பதன் மூலம் &amp;quot;உலுலுலுலுலுலு...&amp;quot; என்ற இழுவல் ஓசை குலவை ஒலி உண்டாக்கப்படும். நாற்று நடவு, அறுவடை போன்ற [[உழவு]] வேலைகளின் போதும் [[பூப்புனித நீராட்டு விழா|பூப்புனித நீராட்டு]] போன்ற இல்ல நன்னிகழ்வுகளின் போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும். &lt;br /&gt;
&lt;br /&gt;
==குலவை போடும் முறை==&lt;br /&gt;
&lt;br /&gt;
உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைக்கும் போது வாயின் மேற்பக்கமாக உள்ளங்கையை வளைத்துப்பிடித்திருப்பர். இதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவை ஆகும். &amp;lt;ref&amp;gt;மட்டக்களப்பு குரவைக்கூத்து - பழமையும் புதுமையும். ஆராய்சி இதழ், ஜீலை 1976, இதழ் 3 , மலர் 7, பக்கம் 157&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
1) குலவை ஒலி இயற்கையாக வெளிவருவதைவிட வளைத்துப்பிடித்திருக்கும் கையில் மோதி எதிரொலித்து மேலும் அதிகமாக உரத்தொலிக்கும். (Eco)&lt;br /&gt;
&lt;br /&gt;
2) கையை வளைத்துப்பிடிப்பதன் மூலம் தான் குலவையிட ஆயத்தமாக (Symbol) இருப்பதாக பிறருக்கு உணர்த்துதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3) கையைவைத்து வாயை மறைப்பதன் மூலம் குலவையிடும்போது முகத்தில் ஏற்படும் அங்க அசைவுகளின் விகாரத்தை பிறர் பார்க்காமலிருக்கச் செய்தல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சங்க இலக்கியத்தில் குரவை==&lt;br /&gt;
* &amp;lt;poem&amp;gt;&amp;quot;...........குறவர் மாக்கள் &lt;br /&gt;
::வாங்கு அமைப் பழுனியதேறல் மகிழ்ந்து&lt;br /&gt;
வேங்கை முன்றில் குரவை அயரும்&amp;quot; &amp;lt;/poem&amp;gt;  (புறம் - 129)&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;lt;poem&amp;gt;&amp;quot;வியலறை வரிக்கும் முன்றில், குறவர்&lt;br /&gt;
::மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்&amp;quot;&amp;lt;/poem&amp;gt; (அகம் - 232)&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;lt;poem&amp;gt;&amp;quot;வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,&lt;br /&gt;
::வேங்கை முன்றில் குரவையும் கண்டே&amp;quot;&amp;lt;/poem&amp;gt; (நற்றிணை - 276)&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;lt;poem&amp;gt;&amp;quot;கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்&lt;br /&gt;
::நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல்&lt;br /&gt;
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து&lt;br /&gt;
::தொண்டகச் சிறுபறைக் குரவை அயர ...&amp;quot;&amp;lt;/poem&amp;gt; (திருமுறுகாற்றுப்படை - 197)&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;lt;poem&amp;gt;&amp;quot;நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு&lt;br /&gt;
::மான் தோல் சிறு பறை கறங்க கல்லென&lt;br /&gt;
வான் தோய் மீமிசை அயரும் குரவை&amp;quot;&amp;lt;/poem&amp;gt; (மலைபடுகடாம் - 322)&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;lt;poem&amp;gt;&amp;quot;முழங்குக் குரவையிரவிற் கண்டேகுக&amp;quot; &amp;lt;/poem&amp;gt; (திருக்கோவையார்)&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;lt;poem&amp;gt;&lt;br /&gt;
&amp;quot;பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப&lt;br /&gt;
::பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப&lt;br /&gt;
ஒருசார், விழவுநின்ற வியலாங்கண்&amp;quot; &amp;lt;/poem&amp;gt; (மதுரைக்காஞ்சி - 97,98)&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளியிணைப்பு == &lt;br /&gt;
[http://www.youtube.com/watch?v=AfXauKtkiIM குலவை ஒலி - காணொளி]&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் பண்பாடு]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Arularasan. G</name></author>
	</entry>
</feed>